Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

மலரும் நினைவுகள்...!

நம்முடைய சிறுவயதில் நம்மில் பல பேர் பலவிதமான திறமைகளை பெற்றிருப்பார்கள். சிலர் ஓவியம் வரைவதில் கில்லாடியாக இருப்பார்கள். சிலர் அனைவரும் வியக்கும் வகையில் கவிதை அல்லது கட்டுரை எழுதுவார்கள். சிலருக்கு பேச்சுத்திறமை இருக்கும். இதுபோன்ற பல திறமைகள் நம்மிடம் இருந்திருக்கும்.

ஆனால், அவை அனைத்தும் காலப்போக்கில் அப்படியே விட்டு இருப்பீர்கள். அதற்கு பல காரணங்களை கூறினாலும் மிக முக்கிய காரணமாக விளங்குவது நேரமின்மை மட்டுமே, இப்போது உங்களது திறமைகள் அனைத்தும் வெளிகாட்டுவதற்கு ஓர் வாய்ப்பு.

நாம் இப்போது உள்ள சூழ்நிலையில் நமக்கு எண்ணற்ற நேரங்கள் கிடைக்கிறது. உங்களுக்குள் ஒளிந்திருக்கும், நீங்கள் மறந்து போன திறமைகளை இப்போது வெளிப்படுத்துங்கள்.

ஓவியத்தில் நீங்கள் சிறந்தவர் என்றால் உங்கள் மனதிற்கு பிடித்தமான பொருளை வரைந்து அதை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்துங்கள்.

நீங்கள் கவிதை எழுதுவதில் சிறந்தவர் என்றால் உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அவர்களை பற்றி ஒரு கவிதையை நம் அழகிய தமிழில் எழுதி, அதை அவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடையுங்கள்.

இதுபோன்று ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கும் உங்கள் திறமைகளை மற்றவர்களிடம் செய்து காட்டி மகிழ்ச்சி அடைந்திடுங்கள்.

சிறுவயதில் நீங்கள் மறந்த, செய்ய நினைக்கும் விஷயங்களுக்கான நேரமாக இதை பாருங்கள்.

இதுபோன்ற செயல்களை செய்யும்போது நீங்கள் குழந்தை பருவங்களில் செய்த சின்ன சின்ன சுவாரஸ்யமான விஷயங்கள் அனைத்தும் உங்கள் நினைவிற்கு வரும். அவை நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியை தேடி தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக