Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 11 ஏப்ரல், 2020

பிரியாணி கேட்டு அடம்பிடித்த கொரோனா பேஷன்ட்: கோவையில்தான் இந்தக் கூத்து!!

கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீயணைப்பு கருவியை எடுத்து கொரோனா வார்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை ஆர்.எம்.ஓ. போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை வீட்டிலோ, மருத்துவமனையிலோ தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும்போது, கடுமையான மருத்துவ விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரியாணி கேட்டு அடம்பிடிக்கும் கொரோனா நோயாளியை க்ண்டு, மருத்துவமனை நிர்வாகம் நொந்துபோய் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!