Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

ஊரடங்கு சமயத்தில் இறந்த உ.பி. முதல்வர் யோகியின் தந்தை

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை 10.44மணியளவில் உயிரிழந்தார்.

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த் சிங் பிஷ்ட் (யோகி ஆதித்யநாத்தின் தந்தை) கடந்த சில நாட்களாகவே மோஒசமான நிலையில் இருந்தார். வெண்ட்டிலேட்டரில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

யோகி ஆதித்யநாத்தின் தந்தை இதற்கு முன்பு வனக்காவலராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அரசியல் பிரமுகர்களும் அரசாங்க அதிகாரிகளும் மக்களும் தங்கல் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!