Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 11 மே, 2020

இன்று 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று .!

 


சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் இன்று ஒரே மேலும் 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்தே செல்கிறது. இன்று மட்டுமே 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 7204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையில் இன்று மட்டுமே 509 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால்,அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஏற்கனவே 18  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செயய்யப்பட்ட நிலையில், சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் இன்று ஒரே மேலும் 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை 26 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக