Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 மே, 2020

சீனர்களை பிடித்துள்ள விசித்திர பழக்கம் இந்தியர்களுக்கும் வருமா?

 
சீனர்களை பிடித்துள்ள விசித்திர பழக்கம் இந்தியர்களுக்கும் வருமா
சீனாவின் குவாங்சோ நகரில் பிரெஞ்சு நிறுவனமான ஹெர்ம்ஸின் மிகப்பெரிய ஷோரூம் இருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இக்கடையில் விற்பனை தொடங்கிய நாளில் 2.7 மில்லியன் டாலருக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. ஒட்டுமொத்த சீனாவிலேயே ஒரே கடையில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் நடந்தது இதுவே முதல்முறை.


இதன்படி சீன நகரங்களிலுள்ள ஆப்பிள், நைக், குக்கி, எஸ்டீ லவுடெர், லான்கோம் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் கடைகளில் நீளமான வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்துக்கிடக்கின்றனர். இவர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்து பொருட்களை வாங்குவதால் வியாபாரம் மிக ஜோராக நடைபெறுகிறது.

சீன மக்களை பிடித்திருக்கும் இந்தப் புதிய பழக்கம் இந்திய மக்களுக்கும் வருமா? இதுகுறித்து பெய்ன் & கம்பெனி நிறுவனத்தின் பங்குதாரர் நிகில் பிரசாத் ஓஜா எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இந்திய சந்தையில் மதிப்புக்கு மவுசு இருக்கும். மக்கள் விலை குறைவான பொருட்களை தேடிச் செல்வார்கள். மறுபுறம், அதிக வருமானம் பெறும் குடும்பங்கள் அதிக செலவுகளை செய்து பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

அல்வரெஸ் & மர்சால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிதின் ஜெயின் பேசுகையில், “இந்திய நுகர்வோரை சீன நுகர்வோருடன் ஒப்பிட முடியாது. இந்தியாவில் விற்பனை பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக