Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 மே, 2020

'ஆரோக்கிய சேது' செயலி மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படும்படி செய்யுங்க: மத்திய அரசுக்கு கடிதம்

கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் தகவல்களை வழங்கும் வகையில் 'ஆரோக்கிய சேது' என்ற மொபைல் அப்ளிகேஷனை( செயலி) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

நீங்கள் நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கை வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

இதனை அனைத்து பொதுமக்களும் தங்கள் மொபைல்போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் "ஆரோக்கிய சேது" ஆப்பை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும்போது அதில் ஏற்கெனவே "ஆரோக்கிய சேது" ஆப் இடம்பெற்றிருப்பதை ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் மத்திய சமூக நீதிகள் துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில், "மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படும் விதத்தில் 'ஆரோக்கிய சேது' செயலியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதாவது, செவித்திறன் குன்றியோரும் பயன்படுத்தும் விதத்தில், இந்த செயலியில் தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும், கொரோனா தொடர்பான எச்சரிக்கை மற்றும் தகவல்களை செவித்திறன் குன்றியோரும் புரிந்துக் கொள்ளும்விதத்தில் செய்கை மொழியில் அவற்றை விளக்கும் வசதியும் இடம்பெற வேண்டும்" என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக