Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 ஜூன், 2020

இன்று முதல் திருப்பதியில் 12,750 பேர் தரிசனத்துக்கு அனுமதி.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் மாதம் முதல் திருப்பதி கோவில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 13-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அம்மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, திருப்பதி கோவிலில் கடந்த 8-ம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை கோவில் நிர்வாகம் அனுமதித்தது. பின்னர்,  11-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை திருப்பதியில்மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நாளொன்றுக்கு 12 ,750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக