Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 23 ஜூன், 2020

37 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை! முதல்வர் முக்கிய முடிவு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், முழு  ஊரடங்கு  உள்ளிட்டவைகள் குறித்து நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக  அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை  நடைபெறும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக