Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 11 ஜூன், 2020

வருங்கால வெற்றிக்கான அறிகுறிகள்... என்ன தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம் !!

மனைவி : வர வர எனக்கு இந்த நகை, புடவை மேல இருக்குற ஆசையே விட்டுப் போயிடுச்சுங்க.
கணவன் : நிஜமாவா சொல்ற?
மனைவி : ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்த பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிக்கிட்டு இருக்குறது..
கணவன் : 😏😏
-----------------------------------------------------------------------
பாபு : போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு?
குமார் : அதுக்கென்ன?
பாபு : குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்த மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டுவேன்னு ஒரே தகராறு பண்றாரு...
குமார் : 😆😆
-----------------------------------------------------------------------
தீபக் : தேர்தலில் தோல்வி அடையாமல் இருக்க என்ன வழி?
சோமு : போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!
தீபக் : 😂😂
-----------------------------------------------------------------------
               சிறந்த வரிகள்...!
-----------------------------------------------------------------------
சில திருப்பங்கள் கடினமானவைதான்...
ஆனால் பாதையை தொடர்வதற்கு கடந்துதான் ஆக வேண்டும்...

மகிழ்ச்சி, நம்பிக்கை, வெற்றி மற்றும் அன்பின் விதைகளை நடவு செய்யுங்கள்.

இவை அனைத்தும் உங்களிடம் ஏராளமாக திரும்பி வரும். இது இயற்கையின் விதி.!!

உலகில் நடக்கும் அனைத்து சாதனைகளும் பல சமயம் பற்பல சோதனைக்கு உட்பட்டிருக்கும்.
எனவே எந்தவொரு தோல்வியும் வருங்கால வெற்றிக்கான அறிகுறியே...!!
-----------------------------------------------------------------------
                விடுகதைகள்...!
-----------------------------------------------------------------------
1. காய் காய்த்தும் பழம் பழுக்காத மரம். அது என்ன?

2. குண்டுகுழி ராசாவுக்குக் குடல் எல்லாம் பல். அவர் யார்?

3. இரவும், பகலும் ஓய்வில்லை, இவன் படுத்தால் எழுப்ப ஆளில்லை. அவன் யார்?
-----------------------------------------------------------------------
                    பதில் :
-----------------------------------------------------------------------
1. முருங்கை மரம்.
2. மாதுளம்பழம்.
3. இதயம்.
-----------------------------------------------------------------------
      குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------------------------
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
-----------------------------------------------------------------------
                   பொருள் :
-----------------------------------------------------------------------
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டம் அற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிட சிறந்தது என போற்றப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக