Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 5 ஜூன், 2020

பொடுகு வராம செய்ய முடியுமா? இதை செய்தா தலையில் பொடுகை தேடவேண்டியிருக்கும்!

உங்கள் சருமம் போன்றே கூந்தலும் வறண்டு, எண்ணெய்ப்பசையாக இருக்க வாய்ப்புண்டு. அதற்கேற்ற ஷாம்புக்களை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக கடினத்தன்மை கொண்ட ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டாம்.

ஷாம்புவிலும் பிஹெச் அளவு உண்டு இதில் 7 க்குள் இருப்பவற்றை மட்டும் பயன்படுத்துங்கள். உங்கள் கூந்தலில் அழுக்கு அதிகம் படியும் வகையில் நீங்கள் பணிபுரிந்தால் வாரத்துக்கு மூன்று முறை மைல்டான ஷாம்பு கொண்டு கூந்தலை சுத்தமான நீரில் அலசுங்கள். இதனால் கூந்தல் சுத்தமாக இருக்கும். கூந்தலில் அழுக்குகள் படியாது பொடுகுகள் வருவதற்கு வாய்ப்பும் இருக்காது​

தலைக்கு எண்ணெய் - பொடுகு தவிர்க்க

பொடுகு என்பது கூந்தலுக்கு அவ்வபோது வரும். பிறகு சமயங்களில் குறைந்திருக்கும் அதற்கேற்ப எண்ணெய் பயன்பாடும் இருக்க வேண்டும். பொடுகு இல்லாத நேரத்தில் எண்ணெய் வைக்கலாம். அதிகப்படியாக எண்ணெய் வைக்கும் போது எண்ணெய் படிவதால் பொடுகு அதிகரிக்க கூடும் அதனால் குறைந்த அளவு எண்ணெய் மட்டுமே பயன்படுத்துங்கள்.

பொடுகு இருக்கும் போது எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொடுகுக்கான பராமரிப்புக்கு பிறகு எண்ணெய் பயன்படுத்தலாம்.

தலைசீவும் போது - பொடுகு தவிர்க்க

குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனி சீப்பை பயன்படுத்த வேண்டும். தலை சீவும் போது முடியை அழுந்த வாரக்கூடாது. முடியின் வேர்ப்பகுதியில் அழுத்தமாக வாரினால் தலையின் ஸ்கால்ப் பகுதி எரிச்சல் அடையக்கூடும் அதோடு பொடுகும் அதிகரிக்கும். சீப்பை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். இலேசான அழுக்கு கொண்ட சீப்பு கூட தலையில் அழுக்கையும் பொடுகையும் உண்டாக்கிவிடும்.​

ஹேர் பேக் - பொடுகு தவிர்க்க

கூந்தலில் பொடுகு இல்லாமல் கூட இருக்கட்டும். ஆனால் கூந்தலின் பொலிவு குறையாமல் இருக்கவும், கூந்தலில் இருக்கும் பூஞ்சைகள் நீங்கவும் கூந்தலை சுத்தம் செய்யவும் அவ்வபோது செய்ய வேண்டிய பராமரிப்பு மிகவும் முக்கியம்.

அந்த பராமரிப்பில் முக்கிய இடம் எலுமிச்சை சாறுக்கு உண்டு. சருமம் போன்று கூந்தலுக்கும் எலுமிச்சை சாறை நேரடியாக தடவாமல் சம அளவு தண்ணீர் கலந்து கூந்தல் முழுக்க தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும் குறிப்பாக கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் தடவினால் மயிர்க்கால்களில் பூஞ்சை கிருமித்தொற்று வெளியேற்றப்படும்.

இதை மாதம் இருமுறை செய்துவருவதன் மூலம் பொடுகு வராமல், பொடுகை அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!