Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 23 ஜூன், 2020

இனி ONLINE விற்பனையிலும்; எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள் என குறிப்பிட வேண்டும்...

ஆன்லைன்(online) விற்பனையில் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) சமீபத்தில் தொடங்கியுள்ளது.

பெரும்பாலான இ-காமர்ஸ்(e-commerce) போர்ட்டல்கள் சீன பொருட்களை விற்பனை செய்கின்றன, ஆனால் இது குறித்து வாடிக்கையாளர்கள் அறியாமல் இருக்கிறார்கள் என CAIT கூறுகிறது,. இந்நிலையில் தற்போது ​​ஒவ்வொரு இ-காமர்ஸ் போர்ட்டலுக்கும் தங்கள் தளங்களில் விற்கப்படும் ஒவ்வொரு தயாரிப்புகளிலும் 'country of origin(தயாரிப்பு நாட்டின் பெயரை)' கட்டயமாக குறிப்பிட வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு நாட்டின் பெயரை குறிப்பிடுவதை கட்டாயமாக்குமாறு வணிகர்கள் குழு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை ஒரு தகவல்தொடர்பு வர்த்தகர்களின் அமைப்பு வழிநடத்த வலியுறுத்தியது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் ஆதரவு முறையீடுகளை வழங்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!