Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 11 ஜூலை, 2020

“இருமலை போட்டு” டாக்டர்களை விரட்டிய கிராம மக்கள்!

“இருமலை போட்டு” டாக்டர்களை விரட்டிய கிராம மக்கள்!

திருவனந்தபுரத்தில் தொற்றுத் தீவிரமடைந்து வரும் சூழலில், “கொரோனா என்ற ஒன்றே இல்லை” என, மக்கள் மருத்துவர்கள் முகத்திற்கு அருகே இருமிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கேரளாவில் நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் இந்த சூழலில், கொரோனா என்பதை நம்ப மறுத்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள், இருமி, இருமி மருத்துவக் குழுவை விரட்டி அடித்தனர்.

நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. அந்த மாநிலத்தில் அதிரடியாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நோய்த் தொற்று பரவியபோதும் முன்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கேரளாவைத் தொடர்ந்து கொரோனா கண்டறியப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிராவில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனினும் சமீப நாட்களாகக் கேரளாவின் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாகக் கேரளா, திருவனந்தபுரத்தில் நோயின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அம்மாநிலத்தில் மருத்துவக் குழுக்களைக் கொண்டு திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொள்ளச் சுகாதாரத் துறை அறிவுறித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக பூன்துரா என்ற கிராமத்திற்கு மருத்துவக் குழு ஒன்று ஆய்வுக்காகச் சென்றுள்ளது. அப்போது, ஆய்வுக்கு காரில் வந்த குழுவை எதிர்த்துக் குறிப்பிட்ட கிராம மக்கள் வழிமறித்து கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

சுமார் நூற்றுக்கணக்கில் திரண்ட பூன்துரா கிராம மக்கள் மருத்துவர்கள் உள்ளே அனுமதிக்க முடியாது எனத் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மருத்துவர்க் குழு என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த சிலர், ஆய்வுக்கு வந்த மருத்துவர் டயூதி உள்ளிட்டோரை முற்றுகையிட்டுள்ளனர். இதுகுறித்து டயூதி கூறுகையில், “எங்களை முற்றுகையிட்ட சிலர். கொரோனா எனப் பொய் சொல்கிறீர்கள். எங்கள் கிராம மக்களுக்குச் சிகிச்சை அளித்தது போதும், ஒழுங்காக அவர்களைத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். கொரோனா என ஒன்று இல்லவே இல்லை. இதனால் பரிசோதனைகள் செய்ய முடியாமல் திரும்பிவிட்டோம்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குச் சென்ற மருத்துவர்கள் கொரோனா அச்சம் காரணமாக தங்களை ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்பின் சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!