>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 1 செப்டம்பர், 2020

    உலகில் மிகவும் எளிதில் கிடைப்பது எது?... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------

    பாபு : ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுற?
    ராம் : ஏன்னா... அதான்... நெருப்புக் கோழியாச்சே......
    பாபு : 😜😜
    -------------------------------------
    சீனு : கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்க வேலை செய்யுறாரு?
    ராஜ் : பிளேடு கம்பெனியிலங்க...
    சீனு : 😬😬
    -------------------------------------

    நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பாக்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
    டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது... பீஸ் வாங்குவேன்...
    நோயாளி : 😡😡
    -------------------------------------
    பொன்மொழிகள்...!!
    -------------------------------------

    ஒரு முறையாவது உங்களை பற்றி முழுமையாக சிந்தித்துப்பாருங்கள்...
    இல்லையென்றால் வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையை தவற விட்டுவிடுவீர்கள்...
    -------------------------------------
    சீடனின் கேள்வியும்... குருவின் பதிலும்...!!
    -------------------------------------

    சீடர் : குருவே உலகில் மிகப்பெரிய பொருள் எது?
    குரு : ஆகாயம்.
    சீடர் : மனிதரிடம் நீங்கள் காணும் மிகச்சிறந்த ஒன்று எது?
    குரு : தன்னம்பிக்கை.
    சீடர் : மனித இனம் அபூர்வமாக காணும் ஒரு விஷயம் என்ன?
    குரு : சுயக்கட்டுப்பாடு.
    சீடர் : உலகை ஆள்வதும், அடக்குவதும் எது?
    குரு : எண்ணங்கள்.
    சீடர் : உலகில் மிகவும் எளிதில் கிடைப்பது எது?
    குரு : அறிவுரை.
    சீடர் : உலகில் பெறுவதற்கு கடினமானது எது?
    குரு : தன்னை அறிதல்.
    -------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!
    -------------------------------------

    ⭐ நமக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என எண்ணிவிடாதே...
    அறிந்தவன் எல்லோரும் கோபுரத்தில் இருக்க வேண்டும் என அவசியமில்லை...!!

    ⭐ வென்றவனுக்கு நீங்கள் கைதட்டும்போது அவன் காதுகளுக்கு கேட்காத உயரத்தில் அவன் இருப்பான்...
    வெல்லப்போகிறவனுக்கு தோள் தட்டுங்கள்... நீங்கள் என்றுமே அவன் நினைவில் இருப்பீர்கள்...!!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக