Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 27 அக்டோபர், 2020

மகர ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021.. பாகம் - 10

2020 ஆங்கிலப் புத்தாண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது |  2020 New year Rasi Palangal Makaram Rasi - Tamil Oneindia

மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!!

நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் மகர ராசியில் பனிரெண்டில் இருந்துவந்த குருதேவர் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக மகர ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வீக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பூர்வீக சொத்துக்களை விருப்பம் போல் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு :

திருமணமான தம்பதிகளுக்கு சுபச்செய்திகள் விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான இடமாற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறுதொழில் செய்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் உயர்கல்வி பெறுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.

 

வியாபாரிகளுக்கு :

கூட்டாளிகளின் மூலம் மேன்மையான பலன்கள் ஏற்படும். புதிய வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் லாபம் உண்டாகும். உணவு சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு :

மனைகளின் மூலம் பொருளாதாரம் மேம்படும். தானியம் தொடர்பான விளைச்சலில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விளைச்சலுக்கு ஏற்ப லாபங்கள் கிடைக்கும். கால்நடைகளின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். வயதில் மூத்த கலைஞர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பதன் மூலம் நன்மதிப்பை உருவாக்கி கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தொழில் நிமிர்த்தமாக புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சற்று காலதாமதம் உண்டாகும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு :

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பதற்கான தருணங்கள் ஏற்படும்.

 

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை சூட்டி, எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக