Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 1 அக்டோபர், 2020

Airtel பயனர்களுக்கு குட் நியூஸ்; இனிமே "அந்த" கவலையே வேண்டாம்!

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்டோபே சேவை தற்போது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. இதனால் என்ன பயன், இதை ஆக்டிவேட் மற்றும் டிசேபிள் செய்வது எப்படி, இதோ முழு விவரங்கள்.

நீண்ட காலமாக இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் பாரதி ஏர்டெல் ஆட்டோபே சர்வீஸ் (Autopay Service) எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்து கவலைப்படுகிற விஷயங்களில் ஒன்று, ஒவ்வொரு முறையும் அவரது தற்போதைய திட்டம் அதன் காலாவதி தேதிக்கு அருகில் வரும்போது புதிய திட்டத்துடன் ரீசார்ஜ் செய்வது தான். குறுகிய கால செல்லுபடியுடன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இது ஒரு நிலையான வலி!

ஆனால் அந்த வலிக்கான நிவாரணியாக ஆட்டோபே சர்வீஸ் களமிறங்கி உள்ளது. முன்னதாக இது ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் இந்த நன்மை இப்போது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்டோபே சேவை வாடிக்கையாளர்களுக்கான அடுத்த ரீசார்ஜிற்கு பொறுப்பேற்று கொள்ளும். அதாவது குறிப்பிட்ட திட்டத்தின் வேலிடிட்டி முடியும் போது ஒரு வாடிக்கையாளர் மீண்டும் ரீசார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதை இந்த ஆட்டோபே சேவை உறுதி செய்கிறது.

இதை சாத்தியப்படுத்த வாடிக்கையாளர்கள் அவரின் - தேர்ந்தெடுக்கப்பட்ட - டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகளைச் சேர்த்து எதிர்கால ரீசார்ஜிற்கான கட்டணங்களுக்கான ஊடகங்களை தேர்வு செய்ய வேண்டி இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உங்கள் தற்போதைய திட்டத்தின் காலாவதி தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், ஏர்டெல் ஆட்டோபே சேவை உங்கள் அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பொருத்தமான தொகையைக் கழிக்கும்.

வாடிக்கையாளருக்கு இந்த பரிவர்த்தனை குறித்து, அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வழியாக குறிப்பிட்ட ரீசார்ஜ் சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. குறிப்பிட்ட திட்டம் காலாவதியாகும் மூன்று நாட்களுக்கு முன்னர் புதிய பேக் ரீசார்ஜ் செய்யப்பட்டாலும், மீதமுள்ள வேலிடிட்டியில் எந்த விதமான கழிப்பும் இருக்காது. அதாவது புதிய ரீசார்ஜ் திட்டத்தின் அனைத்து நன்மைகளும் வாடிக்கையாளரின் தற்போதைய அல்லது பழைய திட்டம் காலாவதியான பின்னரே ஆக்டிவேட் செய்யப்படும்.

ஆக மொத்தம், வாடிக்கையாளர்கள் ஒரு சில்லறை விற்பனையாளர் மூலமாகவோ அல்லது ஏதாவது ஒரு ஆன்லைன் போர்ட்டல் வழியாகவோ கடைசி நிமிடத்தில் ரீசார்ஜ் செய்யும் சம்பவங்கள் இனி நடக்காது.

ஒருவேளை ஏதேனும் காரணத்திற்காக ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ஆட்டோபே சேவையால் வாடிக்கையாளர் அதிருப்தி அடைந்தால் அல்லது பொதுவாக இதை விரும்பவில்லை என்றால், அவர் எப்போது வேண்டுமானாலும் இதை அகற்றலாம்.

வாடிக்கையாளர் செய்ய வேண்டியதெல்லாம் ஏர்டெல் ஆப்பில் உள்ள அவர்களின் அக்கவுண்டிற்குச் சென்று சேவைகள் கட்டணசர்வீஸ் பேமண்ட் செட்டிங்ஸ்-இல் இருந்து டிசேபிள் ஆட்டோபே என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இதை சாத்தியப்படுத்த வாடிக்கையாளர் அதை ஆக்டிவேட் செய்து இருக்க வேண்டும். அதையும் இதே வழிமுறையின் கீழ் ஆக்டிவேட் செய்ய வேண்டும், அவ்வளவு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!