![]()
அரசுத் தரப்பு இதற்காக சென்னையைச் சேர்ந்த பல பெருநிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
பண்டிகைக் காலம் என்பதால், சீசன் வியாபரத்தைக் குறிவைத்து இனிப்புக் கடைகளும் ஆடை நிறுவனங்களும் புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர் தற்போது இந்தப் போட்டியில் இணைந்துள்ளது அரசுப் பால் நிறுவனமான ஆவின். இதற்காக, சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும்
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “தமிழக முதல்வர் எடப்பாடி கே.
பழனிசாமியின் தலைமையிலான அரசு, பால் வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுக்கு
இணங்க தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை
நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால்
விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
மேலும் வெண்ணெய் , நெய், பால்கோவா, ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உரிய
தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம்
விற்பனை செய்து வருகிறது. அத்துடன் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் உப
பொருட்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு கீழ்கண்ட 5 வகையான
சிறப்பு இனிப்புகளை 23.10.2020 முதல் விற்பனையை துவங்கியுள்ளது.
1. ஸ்டஃப்டு டிரை ஜாமுன் (250 கி) - ரூ.190.002)
2. நட்டி மில்க் கேக் (250 கி) - ரூ.190.003)
3. ஸ்டஃப்டு மோதி பாக் (250 கி) - ரூ.170.004)
4. காஜு பிஸ்தா ரோல் (250 கி) - ரூ.225.005)
5. ஃபிளேவர்டு மில்க் பர்ஃபி (250 கி) - ரூ.165.006)
மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய பெட்டி (500 கி) - ரூ.375.00க்கு விற்பனை
செய்யப்படுகிறது.
புகழ் பெற்ற சமையல்கலை வல்லுநரான விஜய் டேனி மற்றும் அவருடைய குழுவினர்களை கொண்டு
தமிழக அரசின் கோவிட் - 19 வழிகாட்டுதலின் படி சுகாதாரமான முறையில் தரமான ஆவின்
நெய் பயன்படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் 5 வகையான சிறப்பு இனிப்புகள்
தயாரிக்கப்பட்டு இன்று (அக்.23) முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்பு
வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து
பெற்றுக்கொள்ளலாம” என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தன் ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக இனிப்பு வழங்கும் நிறுவனங்கள், இந்த முறை
ஆவின் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்தால், இந்த முயற்சி வெற்றி பெறும் என்பதால்,
அரசுத் தரப்பு இதற்காக சென்னையைச் சேர்ந்த பல பெருநிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை
நடத்தி வருகிறது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக