Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 நவம்பர், 2020

கிருமி நாசினி இயந்திரம் வெடித்து தலை வெந்துபோனது: அரசு அலட்சியம்!

 

கொரோனா தடுப்புப் பணியின்போது கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் வெடித்துச் சிதறிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே இந்த விபத்திற்குக் காரணம் என பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராகக் கடந்த 8 மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் முன்னணி களப் பணியாளராக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் புதன்கிழமை காலை கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்ககூடிய பகுதிகளில் லைசால் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தி மாரிமுத்துவை இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், உரியப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத நிலையில் மருந்தை நிரப்பித் தெளித்தபோது திடீரென இயந்திரம் வெடித்துச் சிதறியது. இதில் மருந்துடன் சேர்ந்து இயந்திரத்தில் உள்ள சிறிய அளவிலான சிலிண்டரும் வெடித்துச் சிதறியது.

இந்த வெடி விபத்து காரணமாக மாரிமுத்துவின் முகத்திலும், கண்கள் முழுவதிலும் ரசாயனம் பட்டுள்ளது. இதன் காரணமாக மாரிமுத்துவின் முகம் வெந்துபோனது. அத்தோடு மாரிமுத்துவின், கண் பார்வையும் குறைந்துள்ளது.

இதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், அவருக்குச் சுத்தமாகப் பார்வை தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

கிருமிநாசினி இயந்திரம் வெடித்து சிதியது, தரமற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இது குறித்து மாரிமுத்துவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது பார்வை பறிபோனதாகவும், மாநகராட்சி உரிய உபகரணங்கள் வழங்காமல் அலட்சியத்தோடு இருந்ததன் காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அரசு தனது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!