Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

பண்டையகால அடிமை முறை பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

அடிமை முறை வரலாறு: பண்டையகால அடிமை முறை பற்றி பலரும் அறியாத உண்மைகள்! -  lesser known facts about historic and modern slavery | Samayam Tamil

அடிமை முறை குறித்து பலரும் அறியாத உண்மை வரலாற்று தகவல்கள், இந்த தொகுப்பில் காணலாம்.

1.பண்டையக்காலத்தை விடவும், மாடர்ன் காலக்கட்டத்தில் தான் அதிகளவிலான அடிமை முறை பின்பற்றப்படுகிறது என கூறப்படுகிறது. மாடர்ன் காலத்தில் உலகளவில் 45 மில்லியன் அடிமைகள் இருந்ததாக அறியப்படுகிறது.

2.இதில், பெரும்பாலான எண்ணிக்கையில் அடிமைகள் கொண்டிருந்தது இந்தியா தான். இந்தியாவில் மட்டுமே 18 மில்லியன் என்ற எண்ணிக்கையில் அடிமைகள் இருந்துள்ளனர். ஆய்வறிக்கை தகவல் படி காண்கையில், பண்டையக்காலத்தை விடவும், மாடர்ன் காலக்கட்டத்தில் தான் அதிக எண்ணைக்கையில் அடிமை முறை, அடிமைகள் இருந்துள்ளனர் என்று அறியப்படுகிறது.

3.பெஞ்சமின் பிராங்க்ளின் 1790களிலேயே அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று எண்ணினார்.

4.அமெரிக்காவின் முதல் அடிமைகள் முதலாளி ஒரு கறுப்பின அமெரிக்கர் என்று கூறப்படுகிறது. அவர் பெயர் அந்தோணி ஜான்சன், இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். இவர் லீகலாக விர்ஜினியாவில் அடிமைகளை விலைக்கு வாங்கி தொழில் செய்து வந்தார். பின்னாட்களில் இவர் மேரிலாந்தில் புகையிலை தொழில் செய்து வந்தார்.

5.அமெரிக்க அதிபர்கள் வசிக்கும் வெள்ளை மாளிகையின் ஒரு பாகம் அடிமைகளை கொண்டு .கட்டப்பட்டது ஆகும்.

6.நீண்ட காலமாக பிரமிடுகள் அடிமைகளை கொண்டு கட்டப்பட்டதாக ஒரு தகவல் புரளியாக பரவி வருகிறது. ஆனால், உண்மை என்னவெனில், ஊதியம் கொடுத்து பணியமர்த்தப்பட்ட தொழிலாளிகளை வைத்து தான் பிரமிடுகள் கட்டியள்ளனர்.

7.அடிமைத்தனம் என்பது மனிதர்களிடம் மட்டும் இல்லை. பூச்சிகளான எறும்புகள், பிற எறும்புகளை அடிமையாக நடத்தும் குணம் கொண்டிருக்கிறதாம்.

8.சவூதி அரேபியா மற்றும் ஏமனில் 1962ம் ஆண்டு தான் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

9.பண்டைய கிரேக்க மற்றும் ரோமாபுரியில் உப்பு கொடுத்து அடிமைகளை வாங்கி வந்த வழக்கம் இருந்ததாம்.

10.ஏறத்தாழ ஆப்பிரிக்காவில் இருந்து 40 இலட்சம் பேர் அடிமைகளாக பிரேசிலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களை 40% பேர் அமெரிக்க நாடுகளில் வசித்து வருகிறார்கள்.

11.1530 முதல் 1780 க்கு இடைப்பட்ட காலத்தில் 10 இலட்ச ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவிற்கு அடிமைகளாக கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.

12.பெரும்பாலான ரோமாபுரி பகுதிகளில் அடிமைகளை கொடுமை செய்யும் வழக்கம் இருக்கவில்லையாம். மாறாக, அடிமைகளுக்கு போனஸ் வழங்கும் பழக்கம் கொண்டிருந்துள்ளனர். இதனால், அடிமைகள் அதிகமாக, உத்வேகமாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை திகழ்ந்து வந்துள்ளது.

13.ரிச்சர்ட் ஜான்சன் எனும் 9வைத்து அமெரிக்க துணை அதிபர், ஆப்ரிக்க-அமெரிக்க பெண்ணை தனது மனைவியாக ஏற்றார். மற்றும் அவரை லீகலாக தனது அடிமையாக கொண்டிருந்தார்.

14.1850ல் அமெரிக்காவில் 1.3 பில்லியன் டாலர் மதிப்பில் அடிமைகள் இருந்தனர். இது, அப்போதைய அமெரிக்காவின் மொத்த செல்வத்தின் 20% ஆகும்.

15.1833ம் ஆண்டு பிரிட்டன் தனது பட்ஜெட்டில் இருந்து 40% பணத்தை செலவு செய்து, தனது ராஜ்ஜியத்தில் இருந்து மொத்த அடிமைகளுக்கும் விடுதலை அளித்ததாம்.

16.ஜேம்ஸ் புச்சன் எனும் 15 அமெரிக்க அதிபர், அடிமை முறைக்கு எதிரானவராக இருந்தார். இதற்கான சட்டங்களும் இயற்றினார். மேலும், தனது சொந்த பணத்தை செலவு செய்து அடிமைகளை வாங்கி அவர்களுக்கு விடுதலை அளித்தார்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக