Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 31 டிசம்பர், 2020

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2 முதல் சிறை நிரப்பும் போராட்டம்

Tamil Nadu அரசு ஊழியர்கள்  பிப்ரவரி 2 முதல் சிறை நிரப்பும் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் (District Head Quarters) சிறை நிரப்பும் போராட்டங்களை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்‌ஷன் திட்டத்தை (Old Pension Scheme) அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோவின் (Joint Action Council of Teachers’ Organisations - Government Employees’ Organisations (Jacto-Geo)) 2019-ம் ஆண்டு போராட்டம் நடத்தியது. 

2019ஆம் ஆண்டு, ஜனவரி 22-ந் தேதி தொடங்கிய போராட்டங்கள் (Agitation) 10 நாட்கள் தொடர்ந்தன. அதன்பிறகு நீதிமன்ற தலையீட்டின் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள். இந்த போராட்டத்தின்போது, தமிழ்நாடு முழுவதும் 5,068 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகள் (Disciplinary action) பதிவு செய்யப்பட்டிருந்தது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) கிடைக்கவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்பவர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் (Pension) கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தபோதிலும், அதை அரசு (Government) ஏற்கவில்லை என்பதால் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

2019 போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை (Cases) வாபஸ் பெற வேண்டும். ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு தெரிவித்தார்.  

ஜனவரி 19, 20 தேதிகளில் மண்டல (Zone) அளவில் போராடுவதற்கான முன்னேற்பாடுகளை திட்டமிட ’ஆயத்த மாநாடு’ நடத்துவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.  
அதன்பிறகு, பிப்ரவரி 2-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு தெரிவித்தார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக