🌟 கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திரனுடன் சுக்கிரன் பகை என்ற நிலையில் பலம் குன்றிய நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 அதீத கற்பனைத் திறன் கொண்டவர்கள்.
🌟 சுக போக வாழ்க்கையின் மீது மிகுந்த ஈர்ப்பு உடையவர்கள்.
🌟 எதிர்பாலின மக்களின் மீது ஆர்வமும், ஆசையும் உடையவர்கள்.
🌟 எளிதில், எதிலும் திருப்தி அடையமாட்டார்கள். குறுகிய கண்ணோட்டத்திலேயே எதையும் காணக்கூடியவர்கள்.
🌟 தாரத்தை விட தாயின் மீது மிகுந்த அன்பும், பாசமும் உடையவர்கள்.
🌟 பெண் குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தவர்களுக்காக செலவுகளை செய்யக்கூடியவர்கள்.
🌟 குறைவான கல்வி இருப்பினும் உயர் கல்விக்கு நிகராக அறிவும், நுட்பமான செயல்பாடுகளையும் உடையவர்கள்.
🌟 உழைப்பை விடவும் அதிர்ஷ்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்கள்.
🌟 ஆன்மீகம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அது தொடர்பான செயல்களில் குறைவான விருப்பம் உடையவர்கள்.
🌟 தேவையற்ற வாக்குவாதம், சண்டை மற்றும் வம்பு வழக்குகளை விரும்பாதவர்கள்.
🌟 பெரிய அளவிலான நண்பர்கள் வட்டமும், உறவினர் சூளுகையும் உடையவர்கள்.
🌟 தன்னை அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
🌟 நோய்களை பற்றியும் அதற்கான மருந்துகளை பற்றியும் அறிவும், ஞானமும் உடையவர்கள்.
🌟 சில பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவெடுக்காமல் இவர்களே பிரச்சனையை வளர்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 விட்டுக்கொடுக்கும் குணம் இவர்களிடம் இருக்காது.
🌟 அலட்சிய குணத்தால் பல நல்ல வாய்ப்புகளை தவறவிடக்கூடியவர்கள். மற்றவர்களை மதிக்கும் குணமும் குறைவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக