![]()
பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய தனியுரிமைக் கொள்கைகளை பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 82 சதவீதம் பயனர்கள் சொல்லியுள்ள பதில்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதா அல்லது பாதகமாக அமைந்துள்ளதா... இதோ முழு விவரங்கள்.
வாட்ஸ்அப்பின் சமீபத்திய ப்ரைவஸி பாலிசி
அப்டேட் அதன் பயனர்களிடமிருந்து நிறைய எதிர்ப்புகளை மற்றும் பின்னடைவுகளை
எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, அதன் போட்டியாளர்களான சிக்னல் ஆப் மற்றும்
டெலிகிராம் ஆப் போன்றவைகள் அதிக உத்வேகத்தையும், பயனர்களை பெற்று வருகின்றன.
இந்த "ஏற்ற தாழ்வுகளுக்கு" மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த
ஆய்வின் முடிவானது 82% பயனர்கள் வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவஸி பாலிசி அப்டேட்
ஏற்கவில்லை என்கிறது.
சந்தை ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பு ஆலோசனை நிறுவனமான BM Nxt சமீபத்தில்
நடத்திய Better World WhatsApp Privacy Policy Survey என்கிற ஆய்வின் முடிவுகளை
வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 9 முதல் 25 ஜனவரி வரை சுமார் 565 பேருக்கு
மத்தியில் ஒரு ஆன்லைன் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்தவர்களில் 82% பேர் வாட்ஸ்அப்பின் புதிய நகர்வை ஏற்கவில்லை என்று
கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.
37% பயனர்கள் வாட்ஸ்அப்பின் இந்த நடவடிக்கையை தங்கள் தனியுரிமையின் மீதான தீவிரமான
மீறல் என்று கருதுவதாகக் கூறினாலும், 45% பேர் புதிய வாட்ஸ்அப்
தனியுரிமைக் கொள்கைகள் தங்களை பாதிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள்
அதனுடன் வாழ முடியும் என்று நம்புகிறார்கள். இந்த வாட்ஸ்அப் தனியுரிமை மாற்றம்
தங்களைத் தொந்தரவு செய்யவில்லை என்று 18% பேர் மட்டுமே கூறி உள்ளனர்.
மேலும், ஒட்டுமொத்தமாக பதிலளித்தவர்களில் 18%
பேர் ஏற்கனவே ஒரு மாற்று அல்லது கூடுதல் மெசேஜிங் தளத்தைப் பயன்படுத்தத்
தொடங்கியுள்ளதாகவும் கூறி உள்ளனர் அல்லது விரைவில் அவ்வாறு செய்வதைக் கருத்தில்
கொண்டுள்ளனர்.
25% பேர் ஒரு வார காலத்திற்குள் அவ்வாறு செய்வதாகக் கூறினாலும், மேலும் 29% பேர்
ஒரு மாத காலத்திற்குள் மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறி உள்ளனர். ஆயினும்கூட, 28%
பயனர்கள் தங்களுக்கு எந்த விதமான மாற்று திட்டமும் கொண்டிருக்கவில்லை என்று
கூறியுள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த கணக்கெடுப்பிற்காக பதிலளித்தவர்களில் 22% பேர்
பிஸ்னஸ் வாட்ஸ்அப் பயனர்களாக உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தனிப்பட்ட வாட்ஸ்அப்
அக்கவுண்ட்களையும் கொண்டுள்ளனர். இந்த பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை
பயன்படுத்துவதை நிறுத் சாத்தியமீ இல்லை என்றாலும், அவர்களில் பெரும்பாலோர் சிக்னல்
மற்றும் டெலிகிராம் போன்ற மாற்றுகளுக்கு ரிஜிஸ்டர் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
பதிலளித்தவர்கள் ஒருவிதத்தில் அரசாங்கத்தின் தலையீட்டின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். 43% பேர் இன்னும் முழுமையான ஒழுங்குமுறை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர், மேலும் 24% பேர் மாற்றங்களை திரும்பப் பெற வாட்ஸ்அப்பை அரசாங்கம் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், 33% பயனர்கள் பயனர்களை சிறந்த நீதிபதியாக அனுமதிப்பது நல்லது என்று கூறியுள்ளனர்.
கணக்கெடுப்பில் பங்குபெற்ற 80% பயனர்கள், வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கைகளின் பின்விளைவுகளை (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குதளங்களுடனான டேட்டா பகிர்வு) நன்கு அறிவோம் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 20% பயனர்கள் இதுபோன்ற மாற்றங்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளனர்.
"அதிக அளவிலான தனியுரிமை பாதுகாப்பை கொண்ட மெசேஜிங் ஆப் ஆக கருதப்படும் சிக்னல், கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களின் இரண்டாவது தேர்வே ஆகும். பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக டெலிகிராம் ஆப்பே ஆகும்" Better World–BM Nxt நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு துறையின் இயக்குனர், ஜதிந்தர் சிங் கூறியுள்ளார்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
இது
போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள்
போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம்
சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக