Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 21 ஜனவரி, 2021

ஆண்மைக்குறைபாட்டுக்கு மருந்தாகுதா புளிச்சக்கீரை, எப்படி எடுத்துகொள்வது? வேறு நன்மை உண்டா?

தினம் ஒரு கீரை எல்லா நோய்களிலிருந்தும் விலக்கி வைக்கும்.கீரைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பலவிதமான கீரை வகைகளில் கொஞ்சம் புளிப்புத்தன்மையும், அதிக ருசியும் கொண்ட புளிச்சக்கீரையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கீரைகள் ஒவ்வொன்றும் தனி சிறப்புகளை கொண்டவை. தினசரி உணவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 50 கிராம் முதல் 100 கிராம் வரை கீரைகள் சேர்ப்பது அவசியம். தினம் ஒரு கீரையில் அடிக்கடி சேர்க்க வேண்டிய கீரையாக புளிச்சக்கீரையும் அவசியமானது. புளிச்சக்கீரை எடுத்துகொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

புளிச்சக்கீரை

ஆந்திராவில் இந்தக்கீரை மிகவும் பிரபலமானது. கோங்குரா என்று அழைக்கப்படும் இந்த கீரையில் செய்யப்படும் சுவைமிகுந்த கோங்குரா சட்னி இன்னும் பிரபலமானவை. இந்த கீரையை புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை கைச்சிரங்கு,காய்ச்சக்கீரை, சனம்பு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

புளிச்சக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து., வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் நிறைவாக உள்ளது. இதில் வைட்டமின் பி. இ. சி பொட்டாசியம் போன்றவை உள்ளது. புளிச்சக்கீரை இயல்பாகவே புளிப்புத்தன்மை கொண்டிருப்பதால் இதை எப்படி சமைத்தாலும் அதிக புளி சேர்க்க கூடாது. இல்லையெனில் கீரையின் புளிப்பும், புளியும் சேர்ந்து சுவையை மாற்றிவிடும்.

​உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும்

இன்று பலரும் எண்ணெய்க்குளியல் மேற்கொள்வதில்லை. உச்சந்தலையில் என்ணெய் வைப்பதன் மூலம் உடல் குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். உடல் உஷ்ணத்தால் கட்டிகள், வயிறு வலி உபாதை, மலச்சிக்கல் போன்றவற்றை பலரும் எதிர்கொள்கிறார்கள். புளிச்சக்கீரை உடலின் உஷ்ணத்தை சமநிலையில் வைக்க செய்கிறது. இது உடலுக்கு உரமூட்டும் கீரை என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

உஷ்ண உடம்பு கொண்டவர்கள் கீரையை சுத்தம் செய்து வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம். அல்லது 5 இலைகளை நீரில் சேர்த்து கொதிக்கவிட்டு குடித்தால் 3 நாட்களில் பலன் தெரியும்.

​உடற்சுத்தி கீரை

புளிச்சக்கீரையை உடல் சுத்தி கீரை என்றும் சொல்லலாம். இது உடலை சுத்திகரிக்க உதவுகிறது நன்மையான அமிலங்களை கொண்டிருக்கும் இந்த கீரையிலிருந்து வெளிப்படும் காரத்தன்மையுள்ள பொருள் உடலில் இருக்கும் கிருமிகளை வெளியேற்ற செய்கிறது.

உடலில் இருக்கும் நச்சை குறிப்பாக இரத்தத்தில் இருக்கும் நச்சை வெளியேற்றி ரத்தத்தை தூய்மையாக்கும் பணியை புளிச்சக்கீரை செய்கிறது. மந்தமான உணர்வு, இருமல், காய்ச்சல் காலங்களில் புளிச்சக்கீரை சிறந்த தீர்வாக இருக்கும்.

​வாதநோய்க்கு மருந்து

உடலில் சமநிலையற்று இருக்கும் வாதத்தால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு புளிச்சக்கீரை உதவும். வாதம் சம்பந்தமான நோய்கள் தீவிரமாகாமல் இருக்கவும், கட்டுக்குள் வைக்கவும் படிப்படியாக குணமாகவும் உணவு முறையில் அடிக்கடி புளிச்சக்கீரையை சேர்க்கவேண்டும்.

புளிச்ச்சக்கீரை பொடி, புளிச்சக்கீரை துவையல், புளிச்சக்கீரை மசியல் என ஏதாவது ஒரு வகையில் வாரம் இரண்டு முறை சேர்த்து வந்தால் வாதம் குறைந்து சமமாகும்.

​மலச்சிக்கலுக்கு மருந்து

பொதுவாக கீரைகள் சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. ஆனால் மலச்சிக்கல் வந்த பிறகு புளிச்சக்கீரையை எடுத்துகொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் தீவிரமாகும் போது அது மூலப்பிரச்சனையை கொண்டு வர வாய்ப்புண்டு. அதனால் ஆரம்பகட்டட்தில் கவனித்து உணவு பழக்கம் வழியாகவே மலச்சிக்கலை குணப்படுத்தி விடலாம்.

குடலில் புண்கள் இருந்தால் செரிமானம் ஆவதில் பிரச்சனை உண்டாக்கி அது மலச்சிக்கல் வரை பிரச்சனையை கொண்டு வரும். குடல் புண்ணை ஆற்றி செரிமானக்கோளாறை சீர் செய்து மலச்சிக்கல் இல்லாமல் செய்யும் புளிச்சக்கீரையை வாரம் இரண்டு முறை எடுத்துகொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். வாரம் ஒரு முறை இதை சேர்த்து வந்தால் மலச்சிக்கல் அபாயம் பெருமளவு குறையக்கூடும்.

​கொழுப்பை கரைக்கும்

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்கி கேடுகளை உண்டாக்கும். சில வகையான உணவுகள் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க செய்யும். அப்படியான ஒன்று புளிச்சக்கீரை இது உடலில் சேரும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும்.

ரத்த நாளங்களை சீர் செய்வதால் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இதனால் இதய நோய், பக்கவாதம் உண்டாவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

​சரும வியாதிகள்

சரும வியாதிகளை போக்கும் புளிச்சக்கீரையை உள்ளுக்கும் எடுத்துகொண்டு வெளிப்புறத்திலும் பயன்படுத்துவதன் மூலம் எந்தவிதமான சரும பிரச்சனையாக இருந்தாலும் அதை போக்க முடியும். சொரி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் வரும் போது பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் இது அதிகமாக வரக்கூடியது.

அவர்களுக்கு பாதிப்பில்லாமல் தைரியமாக பயன்படுத்தகூடிய பொருளில் புளிச்சக்கீரையும் ஒன்று. புளிச்சக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து அரைத்து அதன் சாறை வெளியே விடாமல் சொரி, சிரங்கு இருக்கும் பகுதியில் தடவி நன்றாக உலர விட்டு குளிக்க வேண்டும். இதை பயன்படுத்தும் போது உள்ளுக்கும் புளிச்சக்கீரை எடுத்துகொள்வதன் மூலம் சரும நோய் வேகமாக குணமாகும்.

​ஆண்மைகுறைபாட்டுக்கும் மருந்து

ஆண்மைக்குறைபாடு இருப்பவர்களுக்கு புளிச்சக்கீரை உணவாகவும் மருந்தாகவும் உதவும். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தாம்பத்திய வாழ்க்கை மேம்பட புளிச்சக்கீரை உதவும். இதன் விதைகளையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் பால் உணர்வு மேம்படும்.

புளிச்சக்கீரையை மொத்தமாக வாங்கி சுத்தம் செய்து கொள்ளவும். இதை நிழலில் உலர்த்தி வைக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய், சுக்கு இரண்டையும் வாங்கி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பங்கு ஜாதிக்காய், சுக்கு சேர்த்து அதற்கு மூன்று பங்காக புளிச்சக்கீரை உலர வைத்த கீரை எடுத்து அதன் அளவில் பாதி .பருப்பு அல்லது பாசிப்பருப்பு சேர்க்கவும்.

பிறகு இடது அனைத்தையும் மிக்ஸியில் பொடித்து வர மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடிக்கவும். தினமும் மதிய வேளையில் சாப்பிடும் போது இந்த பொடியை சாதத்துடன் கலந்து பசு நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!