Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 21 ஜனவரி, 2021

ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும்... போஸ்ட் ஆபீஸ் திட்டம்!!

 

ல்ல லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டம் குறித்தும், அதன் பயன்கள் மற்றும் எப்படி இணைவது என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம்.

சேமிப்பு என்னும் செல்வம்!

பணத்தை வைத்து நம்மால் அனைத்தையும் வாங்கிவிட முடியாது; ஆனால், நமது சுகத்துக்கு பணம் மிக அவசியமான ஒன்றாகும். பணத்தைச் சம்பாதிப்பதை விட அதைச் சேமிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு செய்துவிட்டு எதிர்காலத்தில் அவசரத் தேவைக்கு ஒன்றும் இல்லாத நிலை ஏற்படாமல் இருக்க சேமிப்பு அவசியம். அதுவும் கொரோனா வந்த பிறகு சேமிப்பு மற்றும் அவசர காலத்துக்கான பணத் தேவை குறித்து பலர் புரிந்துகொண்டுள்ளனர். சேமிப்புத் திட்டங்கள் பல இருந்தாலும் அதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. இந்திய தபால் துறை சிறப்பான சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மாதாந்திர வருமானத் திட்டம்!

வங்கிகளில் நிலையான வைப்புத் தொகை திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் மாதாந்திர வருமானத் திட்டம் நல்ல லாபம் தருகின்றன. ஐந்தே ஆண்டுகளில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தைப் பொறுத்தவரையில், ஆண்டுக்கு 6.6 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக நீங்கள் ரூ.4.50 லட்சம் சேமிக்கலாம். இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம்.

விதிமுறைகள்!

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு சேமிக்க முடியும். ஐந்து ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சேமிப்புக் கணக்கை மூடவேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல, கணக்கு தொடங்கிய முதல் ஆண்டில் கணக்கை மூட முடியாது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டில் கணக்கை மூடினால் பிரின்சிபல் தொகையில் சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும். மூன்றாவது வருடத்தில் மூடினால் ஒரு சதவீத அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

கணக்கு தொடங்குவது எப்படி?

மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு தபால் நிலையத்துக்கு மாற்றலாம். முதலீட்டாளர்கள் எந்தவொரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்கு உட்பட்டு கணக்குகளைத் திறக்க முடியும். அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று இதற்கான விண்ணப்பத்தை வாங்கிப் பூர்த்தி செய்ய இணையலாம். அடையாள ஆவணம், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரிச் சான்று போன்றவை தேவை. விண்ணப்பத்தில் நாமினி பெயரையும் குறிப்பிட வேண்டும். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!