Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 22 ஜனவரி, 2021

WhatsApp New Privacy Policy : வாபஸ் பண்ண சொன்ன இந்திய அரசு; "வாய்ப்பில்லை ராஜா" என்ற வாட்ஸ்அப்!

 WhatsApp tries to reassure users over privacy policy as thousands flee to  rival chat apps | Express.co.uk

புதிய தனியுரிமைக் கொள்கையை திரும்ப பெறச்சொல்லி இந்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு வாட்ஸ்அப் பதிலளித்துள்ளதாக தெரிகிறது

புதிய தனியுரிமை கொள்கைகளை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி பரிந்துரைக்கும, இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கடிதத்திற்கு பதிலளித்த வாட்ஸ்அப், அதன் புதுப்பிக்கப்பட்ட கொள்கையைச் சுற்றியுள்ள எந்தவொரு தவறான தகவலையும் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும், அனைத்து கேள்விகளுக்கும் எங்களிடம் பதில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தியா டுடே வழியாக பகிரப்பட்டுள்ள அறிக்கையில், இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பிரைவேட் மெசேஜ்களுக்கான எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் இரண்டுமே அவற்றைப் "படிக்க முடியாது" என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“வாட்ஸ்அப் எப்போதுமே தனிப்பட்ட செய்திகளை மறைக்குறியாக்கத்துடன் பாதுகாக்கும், இவைகளை வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் இரண்டையும் பார்க்க முடியாது. தவறான தகவல்களைத் தீர்ப்பதற்கும் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என்று ஒரு வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

புதிய கொள்கையானது பேஸ்புக் உடன் தரவைப் பகிரும் திறனை வாட்ஸ்அப்பிற்கு தராது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் தரவு பாதுகாப்பாக இருக்கும் என்று அர்த்தம்.

"இந்த அப்டேட் பேஸ்புக் உடன் தரவைப் பகிரும் திறனை வாட்ஸ்அப்பிற்கு வழங்காது என்பதை வலுப்படுத்த விரும்புகிறோம். வணிகங்களுடன் ஈடுபடுவதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் புதிய விருப்பங்களை வழங்குவதே எங்கள் நோக்கம், இதன் வழியாக அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வளர முடியும்,” என்றும் வாட்ஸ்அப்பின் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

புதிய தனியுரிமைக் கொள்கையை மாற்றியமைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டதின் விளைவாக வாட்ஸ்அப் அதன் சார்பிலிருந்து பதில்களை அளித்துள்ளதாக தெரிகிறது.

நினைவூட்டும் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை மாற்றியமைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இது குறித்து இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரியான வில் காட்கார்டுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தது.

வண்ணம் உலகளவில் வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய பயனர் தளமாக இந்தியா உள்ளது என்றும் அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் "இந்திய குடிமக்களின் தேர்வு மற்றும் சுயாட்சிக்கான தாக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன" என்று அந்த கடிதம் நீள்கிறது.

முன்மொழியப்பட்ட மாற்றங்களை வாபஸ் (திரும்ப) பெறவும், தகவல் தனியுரிமை, தேர்வு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவும் இந்திய அமைச்சகம் வாட்ஸ்அப்பைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியர்கள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் அந்த கடிதம் "வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைகளில் உள்ள ஒருதலைப்பட்சமான மாற்றங்கள் மற்றும் நியாயங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்றும் கூறுகிறது.

பிப்ரவரி 8 ஆம் தேதி கட்டவிழ்த்துவிடப்படவிருந்த புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக வாட்ஸ்அப் ஏற்கனவே அறிவித்துள்ளது. என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!