Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

உங்கள் கவலையை மறந்து... கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

-----------------------------------------------------------

பாபு : காஞ்சிபுரம் இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது... இன்னும் வரலையே...

சர்வர் : காஞ்சிபுரம் என்ன பக்கத்துலயா இருக்கு.. உடனே கொண்டு வர.

பாபு : 😖😖

-----------------------------------------------------------

பணக்கார அப்பா : என் மகள் ஏழையாக இருந்திருந்தாலும் காதலித்து இருப்பாயா?

காதலன் : கண்டிப்பாக காதலித்திருப்பேன்!

பணக்கார அப்பா : அப்போ உன்னை மாதிரி முட்டாள் என் குடும்பத்திற்கு தேவையில்லை.

காதலன் : 😳😳

-----------------------------------------------------------

வார்த்தைகளை கண்டுபிடிங்க...!!

-----------------------------------------------------------

 

1. ச் ஆ ச ம் ய ன் தா ரி

 

2. ப கு யி ழ ன ங் டி ர்

 

3. ண தி வ ரு மா ன ர் ம

 

4. சா சி ன் ரி றோ ஆ ன் 

 

5. பு கொ இ ணை ள் கை ப் 

 

விடை :

 

1. ஆச்சரியம்தான்

 

2. பழங்குடியினர்

 

3. திருமணமானவர்

 

4. சான்றோரின் ஆசி

 

5. இணைப்பு கொள்கை

-----------------------------------------------------------

ஓரெழுத்து ஒருமொழி...!!

-----------------------------------------------------------

 

ஏ - அம்பு, இறுமாப்பு, சிவன், திருமால்

 

ஐ - ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, ஆசிரியர், அழகு, பருந்து

 

ஓ - வினா, மதகு (நீர் தாங்கும் பலகை), ஒளிவு

 

கா - சோலை, காத்தல், காகம், காவடி, பூந்தோட்டம், வலிமை

 

கூ - பூமி, கூவுதல், கூக்குரல், அழுக்கு, பிசாசு

-----------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!

-----------------------------------------------------------

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

 

பொருள் :

 

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக