Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 8 மார்ச், 2021

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மிஸ் பண்ணிடாதீங்க!

 

பள்ளி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பள்ளி, கல்லூரிகளின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் புரட்டி போட்டது. ஆன்லைன் வாயிலாக கல்வி கற்கும் சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவுகள் எடுக்க திட்டமிடப்பட்டது. திடீரென அதிகரித்த வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.


இதையடுத்து பிப்ரவரி மாதம் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக 10 மற்றும் 12ஆம் வகுப்பின் பாடத்திட்டத்தில் 40 சதவீத அளவிற்கு குறைத்து மாணவர்களின் சுமையை குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 9, 10, 11ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இது மாணவ, மாணவிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

 
அதேசமயம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும். சம்பந்தப்பட்ட வகுப்புகளில் முழுமையான கற்றலை பெற்றால் தான் அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் எளிதாக பாடம் கற்க முடியும் என்று

பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. இதையொட்டி கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது.

அதன்படி, மே 3ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து நீட் தேர்விற்கு அடிப்படையாக இருக்கும் வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய தேர்வுகளுக்கு விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுபற்றி அரசு தேர்வுத்துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவறவிட்ட தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி (தத்கால்) திட்டத்தின் கீழ் இன்றும் (மார்ச் 8), நாளையும் (மார்ச் 9) தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!