-----------------------------------------------
சிரிப்பதற்கு மட்டுமே...!!
-----------------------------------------------
மதிய சாப்பாட்டில், சாப்பாட்டை விட வெண்டைக்காய் அதிகமாக இருந்தது. அதை பார்த்துவிட்டு,
கணவன் : என்னமா இது? இவ்ளோ பொரியல் வெச்சிருக்க...
மனைவி : வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்லுவாங்க... கேள்விப்பட்டு இருக்கீங்களா?
கணவன் : ஓ புரிஞ்சிடுச்சு... உன் ஊட்டுக்காரனை ஒரு மிகப்பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்டப்போற அப்படித்தான?
மனைவி : ச்சே... ச்சே... வெண்டைக்காய் அதிகமா சாப்பிட்ட மூளை வளரும்னு சொல்றத பொய்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கப் போறேன்...
கணவன் : 😖😖
-----------------------------------------------
ராம் : நண்பா... தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா.. என் மேல இவ்வளவு அன்பா..
ராம் : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க. அதான்.
வேணு : 😏😏
-----------------------------------------------
புதிர் கேள்வி...!!
-----------------------------------------------
எட்டு, எட்டைக் கூட்டினால் 1000 வரவேண்டும். இந்த எட்டு, எட்டையும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போட்டு கூட்டிக் கொள்ளலாம். ஆனால் கூட்டுத்தொகை 1000 வரவேண்டும்.
-----------------------------------------------
விடை கீழே...👇👇
-----------------------------------------------
வீசும் காற்றுக்கு பெயர் உண்டா?
-----------------------------------------------
கிழக்கிலிருந்து வருவது கொண்டல்...
தெற்கிலிருந்து வருவது தென்றல்...
மேற்கிலிருந்து வருவது கோடை...
வடக்கிலிருந்து வருவது வாடை...
-----------------------------------------------
டங்க் டுவிஸ்டர்...!!
-----------------------------------------------
கரி படுக்க பரி மட்டம்.... கனி பழுக்க கிளி கொத்தும்.
குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்கு பழி.
மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும் பெய்யா மெய்யா மழை.
விடை...
8+8+8+88+888=1000
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக