Paytm செயலி மூலமாக 2 லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்குவது எப்படி என்று இங்கே பார்போம்.
நீங்கள் Paytm இன் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ரூ .2 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம். வங்கிகளில் கடன் வாங்குவதற்கும் நீண்ட காலம் எடுக்கும். ஆவணங்கள் சரிபார்ப்பு, அலைச்சல் என அதில் சிரமங்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக உடனடிக் கடன் வழங்கும் வசதியை Paytm தொடங்கிவிட்டது.
ஆம் Paytm ஆப் (Paytm App) மூலமாக ரூ.2 லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இரண்டே நிமிடத்தில் இந்தக் கடன் கிடைக்கிறது. இதற்காக எந்தவொரு வங்கிக் கிளைக்கும் அலையத் தேவையில்லை. உடனடிக் கடன் வழங்கும் இந்த வசதியை பேடிஎம் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர்தான் அறிமுகம் செய்தது. இந்த வசதி (Personal Loan) குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
வங்கி வேலை நாள், விடுமுறை நாள், அரசு விடுமுறை என எந்த நாளில் வேண்டுமானாலும் இதில் கடன் வாங்கலாம். கடன் வழங்கும் முறை முற்றிலும் ஆன்லைன் சார்ந்தது. ஒப்புதல் கிடைத்தவுடன் இரண்டே நிமிடத்தில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் கடன் தொகை டெபாசிட் செய்யப்பட்டுவிடும். இதில் வாங்கும் கடனை 18 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தலாம்.
நீங்கள் Paytm மூலம் கடன் வாங்க விரும்பினால், நீங்கள் Paytm பயன்பாட்டின் நிதி சேவைகள் பிரிவுக்குச் சென்று பின்னர் personal loan என்ற பிரிவை கிளிக் செய்வதன் மூலம் மேலதிக செயல்முறையை முடிக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் கோரிய தகவலை வழங்க வேண்டும், நீங்கள் இதற்கு தகுதியா இல்லையா என்று காணப்படும், அதன் பிறகு பணம் உங்கள் கணக்கில் மாற்றப்படும்.
அறிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக