Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 28 ஏப்ரல், 2021

ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுங்க..., முதல்வருக்கு கடிதம் எழுதிய பெண்மணி!

Chennai auto rickshaw driver spreads important message by transforming his  auto coronavirus look alike | Times of India Travel

பெண்மணி ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கூறி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த பெண்மணியின் இறந்த கணவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 4500, அந்த ஆட்டோ ஓட்டுநர் கேட்டதற்காக தான், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கூறி, அந்த பெண்மணி கடிதம் எழுதியுள்ளார்.

கோரக்பூரில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் செய்த செயலால் முதல்வருக்கு கடிதம் சென்றுள்ளது. ஒரு பெண் தன் கணவரின் பிரேதத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிரேத பரிசோதனை செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல நினைத்தார். அப்போது ஆட்டோ டிரைவர் ரூபாய் 4500 கொடுத்தால்தான் பிரேத பரிசோதனை இடத்திற்கு கொண்டு செல்வேன் என கூறியுள்ளார். இதனால் அந்த பெண்மணி இதுக்குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

இறந்தவர் பெயர் கமலேஷ் என கூறப்படுகிறது. இவர் கோரக்பூரின் ஹுமாயம்பூர் அருகே காய்கறிகளை விற்பனை செய்து வந்துள்ளார். அவரது மனைவி இதுக்குறித்து கூறும்போது கமலேஷ் காலை எட்டு மணியளவில் ரூபாய் 20,000 ஐ கையில் கொண்டு வெளியேறினார். அவர் இரவாகியும் வீட்டிற்கு வராததால் அவரை தேடினர். ஆனால் கமலேஷை கண்டறிய முடியவில்லை. பின்னர் ஞாயிற்று கிழமை அடையாளம் தெரியாத நபரின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. பின்னர் அது கமலேஷ் என்றும் அவர் இறந்துவிட்டார் எனவும் தெரிந்தது.

தகவல் கிடைத்ததும் கமலேஷின் சசோதரர் போலா பி.ஆர்.டி மருத்துவ கல்லூரியை அடைந்தார். அங்கு சனிக்கிழமை மாலை கமலேஷை சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப்படுகிறது.

அவரது உடலை கேட்டு யாரும் வராத நிலையில் அதை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இந்நிலையில் அவரது உடலை பரிசோதனை செய்த பின்பே கொடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை செய்யும் இடத்திற்கு அவரது உடலை கொண்டு போக சொல்லி உள்ளனர். அப்போது அந்த உடலை கொண்டு செல்வதற்கு அங்கே இருந்த ராஜு என்னும் ஆட்டோக்காரர் ரூபாய் 3500 கேட்டுள்ளார். அந்த உடலை பாலீதினில் மடிக்க மேலும், ஒரு 1000 ரூபாய் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இறந்தவரின் மனைவியான கிரண் தற்சமயம் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே பி.ஆர்.டி கல்லூரியின் முதல்வரான கணேஷ் இந்த விவாகாரம் குறித்து மறுப்பு தெரிவித்து இருந்தார். கல்லூரியில் ரசீது கொடுக்காமல் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என அவர் கூறினார்.

எனவே ஒருவேளை யார் பணம் கேட்டாலும் அவர்களிடம் ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் இந்த செய்தி ட்ரெண்டிங் ஆகி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக