நடிகர்கள்:
கார்த்தி,ரஷ்மிகா மந்தனா,லால்
இயக்கம்: பாக்யராஜ் கண்ணன்சினிமா வகை:Action, Dramaகால அளவு:2 Hrs 2
மோசமான ரவுடியிடம்(கே.ஜி.எஃப். படம் புகழ் ராம்) இருந்து தங்களையும், நிலத்தையும் காக்குமாறு சில விவசாயிகள் சுல்தான் கும்பலை கேட்கிறார்கள். தன் அப்பாவின் அடியாட்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வரும் சுல்தான், இந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கிறார். அதை வைத்து அவர் தான் நினைத்ததை எப்படி சாதிக்கிறார் என்பது கதை.
ஏற்கனவே பார்த்த கதை தான் என்றாலும்
அதை காட்சிப்படுத்திய விதம் புதிது. சுல்தான், ருக்மணி(ரஷ்மிகா மந்தனா) இடையேயான
காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ரஷ்மிகா வரும் காட்சிகள் ரசிகர்களை
கவர்கிறது. சுல்தான் மற்றும் அவரின் அண்ணன்கள் அந்த கிராமத்தில் தங்கி அதை
பாதுகாக்க காதல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஹீரோவால் மட்டுமே அந்த ஊரை காப்பாற்ற முடியும் என்பது போன்று காட்டியுள்ளனர்.
சுல்தானுக்கு மட்டும் அல்ல கதைக்கும் வேட்டு வைப்பது வில்லன் தான். ஒரு
சக்திவாய்ந்த வில்லனுக்கு பதில் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். இடைவேளை ஆக்ஷன்
காட்சிக்கு பிறகு ஜெயசீலன்(ராம்) பெரிதாக எடுபடவில்லை. இரண்டாம் பாதியில் வரும்
முக்கிய வில்லனை பார்த்த உடனேயே ஏமாற்றம் தான். பார்த்த பார்த்து அலுத்துப் போன
கார்பரேட் வில்லனாக வட இந்திய நடிகரை நடிக்க வைத்துள்ளனர்.
சுல்தானின் அண்ணன்களில் ஒருவரான அர்ஜய் தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமான வில்லனாக
இருக்கிறார். ரவுடியிசம், விவசாயம், காதல் என்று அனைத்தும் கலந்து ஒரு பக்கா மசாலா
படத்தை கொடுத்திருக்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
சுல்தான்- தாராளமாக கொண்டாடலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக