ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை
விரிவாக்கம் செய்யும் பொருட்டுக் கடந்த சில வருடங்களில் பல புதிய வர்த்தகத்
துறையில் இறங்கினார்.
இதில் முக்கியமாக அனைவராலும் கவனிக்கப்பட்டது
Hamleys நிறுவனம், 2019ஆம் ஆண்டுப் பொம்மைகள் விற்பனை நிறுவனமான Hamleys-வை
சுமார் 620 கோடி ரூபாய்க்கு மொத்தமாகக் கைப்பற்றி இந்தியாவில் வெளிநாட்டு
மொம்மை பிராண்டை அறிமுகம் செய்தார்.
ப்ரீமியம் பொம்மை விற்பனை சந்தையில் ரிலையன்ஸ்-ன் Hamleys நிறுவனத்திற்குப்
போட்டி இல்லாமல் கடந்த இரண்டு வருடங்களாக ஆதிக்கம் செய்து வந்த நிலையில்
தற்போது முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டத்துடன் போட்டிப்போட பிளிப்கார்ட்
களத்தில் இறங்கியுள்ளது.
பிளிப்கார்ட் அதிரடி முடிவு
இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அமெரிக்காவின்
முன்னணி பொம்மை மற்றும் குழந்தைகள் ஆடை விற்பனை நிறுவனமான டாய்ல் 'ஆர்'அஸ்
மற்றும் பேபிஸ்'ஆர்'அஸ் ஆகிய பிராண்டுகளைத் தனது ஈகாமர்ஸ் தளத்திற்குள்
கொண்டு வர ஒப்பந்தம் செய்துள்ளது.
Ace Turtle உடன் ஒப்பந்தம்
டாய்ல் 'ஆர்'அஸ் மற்றும் பேப்பீஸ்'ஆர்'அஸ் ஆகிய பிராண்ட் பொருட்களைத் தனது
ஈகாமர்ஸ் தளத்தில் விற்பனை செய்வதற்காகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின்
மொத்தவிலை விற்பனை பிரிவும், Ace Turtle என்னும் நிறுவனமும் இணைந்து
புதிதாகக் கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
ரிலையன்ஸ் உடன் நேரடி போட்டி
இந்தத ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் டாய்ல் 'ஆர்'அஸ் மற்றும்
பேப்பீஸ்'ஆர்'அஸ் ஆகிய பிராண்ட் பொருட்களை விற்பனை செய்ய உரிமம்
பெற்றுள்ளது. இதனால் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்-ன் Hamleys உடன் நேரடியாகப்
போட்டிப்போட உள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.
வாடிக்கையாளர்கள்
ஆன்லைன் வாடிக்கையாளர்கள்
பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களை இந்திய
முழுவதும் வைத்திருக்கும் நிலையில் டாய்ல் 'ஆர்'அஸ் மற்றும்
பேப்பீஸ்'ஆர்'அஸ் ஆகிய பிராண்ட் பொருட்களை எளிதாக மக்கள் மத்தியில் கொண்டு
சேர்க்க முடியும்.
விலை
குறைவான விலை
அதேவேளையில் இந்தியாவில் டாய்ல் 'ஆர்'அஸ் மற்றும் பேப்பீஸ்'ஆர்'அஸ் ஆகிய
பிராண்ட் பொருட்களைப் பிளிப்கார்ட் நேரடியாக விற்பனை செய்யும் நிலையில்
குறைவான விலையில் விற்பனை செய்யவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
வால்மார்ட் - பிளிப்கார்ட்
அமெரிக்காவின் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட் 2020ஆம்
ஆண்டில் மட்டும் பொம்மைகள், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் பிரிவில்
மட்டும் கிட்டத்தட்ட 100 சதவீத வர்த்தக வளர்ச்சியை அடைந்துள்ளதாகக்
கூறுகிறது.
கொரோனா, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக மக்கள் வீட்டிலேயே
இருக்கும் நிலையில் இப்பிரிவு விற்பனை அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக