Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 ஜூன், 2021

ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்... யார் அவர்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்....!!
-------------------------------------
ராமு : என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்!
சோமு : எப்படி?
ராமு : என்னோட ரேங்க் கார்டை பாத்தே, என் அப்பா வந்து என்னை என்ன செய்யப் போறாருன்னு சொல்லிடுவாங்களே...!
சோமு : 😄😄
-------------------------------------
அர்ச்சகர் : ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?....
குமார் : வீட்டுல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
அர்ச்சகர் : 😆😆
-------------------------------------
வாழ்க்கை போதனை...!!
-------------------------------------
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே..

2. தேவைக்கு செலவிடு.

3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.

4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.

5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

பொருள் :

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
-------------------------------------
இது எப்படி இருக்கு?
-------------------------------------
என்னதான் மாட்டுக்கு ரோஜாப்பூவா கொடுத்து வளர்த்தாலும், அது 'வெறும்" பால் தான் தரும், 'ரோஸ் மில்க்"லாம் தராது.😛😎😇

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக