Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 11 ஆகஸ்ட், 2021

உலகிலேயே பணக்கார கிராமம் குஜராத்தின் மாதாபர்: காரணம் என்ன?

உலகிலேயே பணக்கார கிராமம் குஜராத்தின் மாதாபர்: காரணம் என்ன?

குஜராத்தின் மாதாபர் கிராமம் உலகிலேயே பணக்கார கிராமமாகத் திகழ்கிறது, இது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ளது.


இந்தக் கிராமத்தில் 17 வங்கிகள் உள்ளன. சுமார் 7,600 வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் குடும்பத்தினரின் மொத்த டெபாசிட் தொகை ரூ.5,000 கோடியாகும்.


தனிநபர் சராசரி டெபாசிட் ரூ.15 லட்சமாகும். 17 வங்கிகளைத் தவிர இங்கு வேறு அனைத்து வசதிகளும் உள்ளன, பள்ளிகள், மருத்துவமனைகள், ஏரிகள், கல்லூரிகள், அணைக்கட்டுகள், கோயில்கள் அனைத்தும் உள்ளன. பசுக்கள் வளர்ப்பிடமும் உண்டு.


குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் அருகே அமைந்துள்ளது மாதாபர் கிராமம். இந்த மாவட்டம் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம். அதிலும் வரலாற்று ரீதியாக, பல காலமாக கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் மக்கள் வசிக்கும் மாவட்டம் ஆகும். கட்ச் மாவட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இவர்களை "மேஸ்திரிஸ் ஆப் கட்ச்" என்று அழைப்பார்கள். இந்த மேஸ்திரிஸ் ஆப் கட்ச் இப்போது ஒரு இனமாகவே மாறிவிட்டது.


முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில் மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான். இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே இதுதான் பணக்கார கிராமம். வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள். இந்த கிராமத்தில் மட்டும் மொத்தம் 17 வங்கிகள் உள்ளது.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!