Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 29 டிசம்பர், 2021

மகளின் கடிதத்தை படித்து தலைசுற்றிய தந்தை... அப்படி என்ன எழுதியிருந்தது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------------------
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்...!!
------------------------------------------------------------------
ஒரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்ததை கண்டு உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது... ஆச்சரியமாக இருந்தது.

அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம்📃 இருப்பதைப் பார்த்தார். அதன்மேல் 'அப்பாவுக்கு" என்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளே இருந்த கடிதத்தைப் படித்தார்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது :

அன்புள்ள அப்பா, 

மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை📝 எழுதுகிறேன்.

என்னை மன்னித்து விடுங்கள். 

என் காதலன் பப்லு-வுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்...

உங்களுடனும், அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை.

அதனால் சொல்லாமல் போகிறேன். பப்லுவின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கி விட்டது...

நீங்கள் பப்லுவைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்...

உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன்...

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்...

அதை கலைக்க பப்லுவுக்கு விரும்பமில்லை...

பப்லுவுக்கும், எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும்... (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல)😮 அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது...

பப்லுவுக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும்..., 

எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான்...

என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்....

பப்லுவுக்கு கூவ நதி🏞 அருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது...

அங்கு நாங்கள் தங்கியிருப்போம்...

அவன் கஞ்சா மொத்த விற்பனையாளனாக இருக்கிறான்..

அது மட்டுமல்ல பிற போதை வஸ்துக்களும் விற்று வருகிறோம்...

விரைவில் உயர்ந்த வாழ்க்கை நடத்துவோம்...

சில போதை வஸ்துக்களை நானும் சுவைத்து பார்த்தேன்... 

ரொம்ப சுகமாயிருக்கிறது...

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்ஸ்-க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்...

ஏனென்றால் அப்போதுதான் பப்லு எய்ட்ஸிலிருந்து விரைவில் குணமடைவான்...

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்...

எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும்.

எனக்கு பதினைந்து வயதாகிறது.

என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,👇👇

ஸ்வப்னா..!

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது..

கடிதத்தின் கீழே 'பின்பக்கம் பார்க்க" என்று எழுதியிருந்தது..

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.

அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:

பின்குறிப்பு : 

அப்பா.., 

நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை...

நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது...

இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது...😳

எனது தேர்வு அட்டை எனது மேஜை மேல் இருக்கிறது.

எடுத்து கையெழுத்து போடுங்கள்.

நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். 

உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்..!!😛😊

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக