
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது குறித்து இந்தியாவுக்கு வாழ்த்துகள் என்று ட்வீட் செய்துள்ளார். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில், CDSCO, சுகாதார அமைச்சகம் அவசரகால தடுப்பூசிகளான CORBEVAX, COVOVAX மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான Molnupiravir ஆகியவற்றை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
Congratulations India
Further strengthening the fight against COVID-19, CDSCO, @MoHFW_INDIA has given 3 approvals in a single day for:
- CORBEVAX vaccine
- COVOVAX vaccine
- Anti-viral drug MolnupiravirFor restricted use in emergency situation. (1/5)
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 க்கு எதிரான இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் RBD புரோட்டீன் சப்- யூனிட் தடுப்பூசி CORBEVAX தடுப்பூசி என்றும் இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது.
COVOVAX, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படும். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த நோயாளிகளுக்கும், நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளவர்களுக்கும் அளிக்கப்படும் சிகிச்சைக்காக, அவசரகால பயன்பாட்டிற்காக, தமோல்னுபிராவிர் மருந்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக