Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 ஜனவரி, 2022

யானை 10 முறை... சுண்டெலி 200 முறை... மனிதன்? இதென்ன கணக்கு வாங்க பார்க்கலாம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
------------------------------------------------

மனைவி : நீங்க வேலை செய்யறத பாத்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியல.
கணவன் : பரவாயில்லையே.. இப்போதாவது மனசு வந்துச்சே..
மனைவி : நீங்க சமைச்சு வைங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போயிட்டு வந்துடறேன்.
கணவன் : 😡😡
------------------------------------------------
மீனா : நீ இப்படி எல்லா வேலையையும் மெதுவா செஞ்சுக்கிட்டிருந்தா நான் வேற ஒரு வேலைக்காரியை பாத்துக்க வேண்டியது தான்!
வேலைக்காரி : சீக்கிரம் பாருங்க அம்மா, எனக்கும் தனியா வேலை செய்யறது பிடிக்கல!
மீனா : 😏😏
------------------------------------------------
சுவாசத்தின் வேகம்..!
------------------------------------------------
💓ஒரு உயிரினம் எவ்வளவு வேகமாக சுவாசிக்கிறது என்பது அதன் உருவ அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. உருவமும், எடையும் அதிகமாக இருக்கும் உயிரினங்கள் குறைந்த எண்ணிக்கையில் சுவாசம் செய்கின்றன.

💓 உதாரணமாக உருவில் பெரிய 🐘யானை நிமிடத்துக்கு 10 முறைதான் சுவாசிக்கிறது. ஆனால் 🐀சுண்டெலி 200 முறை சுவாசிக்கிறது. 💁மனிதன் நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை சுவாசிக்கிறான்.
------------------------------------------------
ஒரு நிமிட கதை..!
------------------------------------------------
வீடு கட்டுவதற்கு முன் பெரிய பெரிய வாஸ்து நிபுணர்களை எல்லாம் அழைத்து வந்து ஆலோசனை நடத்தினான் சுந்தர். வாஸ்து பார்த்து கட்டவில்லை என்றால், வீடு தழைக்காது என்கிற நம்பிக்கை அவனுக்குள் வலுவாக ஊறியிருந்தது.

எனவே, வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படியே ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கட்டினான் சுந்தர். வீடு அருமையாக அமைந்ததில் அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

ஆனாலும், அந்த மகிழ்ச்சி ரொம்ப நாள் நீட்டிக்கவில்லை. வீட்டின் முன் பாதி இடிக்கப்பட்டது. அரசாங்க புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருக்கிறதாம்.!
------------------------------------------------
அர்த்தங்கள் அறிவோம்..!
------------------------------------------------
யானைக்குப்பு - சதுரங்கம்.

குத்துவாதை - பசிவருத்தம்.

விபஞ்சி - ஒரு வகை வீணை.

மாகு - வலை.

பாழ்ந்தாறு - படுகுழி.

நிருச்சுவாசம் - மூச்சு விடாதிருத்தல்.

துணித்தல் - வெட்டுதல்.

தாரங்கம் - மலை.

மாகரி - ஆண்யானை.

பெண்ணாறு - கிழக்கு நோக்கி ஓடும் ஆறு.

சீதளி - பொன்னாங்கண்ணி.

சன்னத்தன் - போர் முதலியவற்றிக்கு தயாராக இருப்பவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக