Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 மார்ச், 2022

இனி வட்டித் தொகை கிடைக்காது.. தபால் துறை தடாலடி அறிவிப்பு!

தபால் அலுவலக முதலீட்டுத் திட்டங்கள் வெகுஜன மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ரிஸ்க் இல்லாத முதலீடு, நல்ல வட்டி வருமானம் என தபால் அலுவலக திட்டங்கள் தனித்துவம் வாய்ந்தவை. இதனால் கிராமப்புறங்களிலும் தபால் அலுவலக திட்டங்கள் ஊடுருவியுள்ளன.

இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme), மாத வருமானத் திட்டம் (Monthly Income Scheme), டெபாசிட் திட்டங்களுக்கு தபால் அலுவலகம் வட்டித் தொகையை செலுத்தாது என தபால் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

இனி வட்டித் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும். வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு இணைக்கப்படாமல் இருந்தால் தபால் அலுவலகம் வாயிலாகவோம், காசோலை மூலமாகவோ வட்டித் தொகை செலுத்தப்படும்.

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்கள் பலர் வட்டித் தொகை பெறுவதற்கு இன்னும் வங்கி சேமிப்புக் கணக்கை இணைக்காமலேயே இருப்பதாக தபால் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தவர்கல் பலரும் வட்டி தொகை கிடைப்பது கூட தெரியாமல் இருப்பதாக தபால் துறை தெரிவித்துள்ளது. எனவே, தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வோர் வட்டித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்கை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!