Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 ஜூன், 2022

வெளிநாடுகளிலிருந்து ரூ.50,000-க்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை கொண்டு வந்தால் வரி கட்டாயம் - உயர் நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும் போது அதற்கான உறுதிமொழியை அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த சந்திரசேகரம், விஜயசுந்தரம் அவரின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் சென்னை வந்தனர். ஆன்மிக சுற்றுலாவுற்கு இந்தியா வந்த இவர்கள் 1594 கிராம் கொண்ட 43 லட்சத்து 90 ஆயிரத்து 754 ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அணிந்தும் அதுதவிர 112 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் எடுத்தும் வந்துள்ளனர்.

அவர்களை தடுத்த சுங்க துறை அதிகாரிகள் சந்திரசேகரம் விஜயசுந்தரம் உள்ளிட்டோர்க்கு அபராதம் விதித்தனர். இதனை எதிர்த்து சந்திரசேகரம் விஜயசுந்தரம் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் கொண்டு வந்தால், அதற்கு சுங்க வரி செலுத்த தேவையில்லை என 2014ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதன்படி தங்களுக்கு விலக்கு அளித்து அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என வாதிட்டார்.

ஆனால் மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி சரவணன், வெளிநாட்டினர் உடமைகள் விதி 1998-ஆம் ஆண்டின் சட்டத்தின்படி கீழ் தான் கேரள உயர்நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதன் பிறகு 2016ஆம் ஆண்டு புதிய விதிகள் கொண்டு வரப்பட்டதாகவும் அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மனுதாரர் ஆன்மீக சுற்றுலாவிற்காக இந்தியா வரும்போது இவ்வளவு நகைகள் மற்றும் மதுபாட்டில்கள் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இந்த அளவிற்கான பொருள்கள் எடுத்து வருவது வணிக ரீதியாக இருக்கலாம் அல்லது அன்பளிப்பாக மற்றவர்களுக்கு அளிக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான பொருள்களை எடுத்துவரும் போது அதற்கான உறுதி மொழியை சம்மந்தபட்டவர்கள் சுங்க துறையிடம் அளிக்க வேண்டும் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் சுங்க வரித்துறை உத்தரவில் எந்தவிதமான தவறும் இல்லை இதில் தலையிட தேவையில்லை எனக் குறி மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக