Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 டிசம்பர், 2017

காய்ச்சல்,சளியை உடனடியாக போக்க எளிய வீட்டு மருத்துவம்!

குளிர் துவங்கிவிட்டது. வரிசையாக காய்ச்சல், இருமல் என்று லேசாக ஆரம்பிக்கும் போதே சுதாரித்து விடுங்கள்.இல்லையெனில் அது உங்களுக்கும் பெரும் செலவை இழுத்து வைக்கும்.
 
குழந்தைகளிடத்தில் பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அத்துடன் இது வேகமாக பரவும் கிருமி என்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள் இருப்பவர்கள் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அப்படி ஆரம்ப நிலையில் இருக்கும் போதே அதனைப் போக்க எளிய மருந்து ஒன்று இருக்கிறது அதனை நீங்கள் எளிதாக வீட்டிலேயே கூட தயாரித்துக் குடிக்கலாம். இது சளியை மட்டும் போக்குவதுடன் நின்றுவிடுவதில்லை. இன்னபிற ஏராளமான மருத்துவ நன்மைகளையும் நமக்குச் செய்கிறது.

மிளகுப் பால் :

பால் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். அதே போல மிளகிலும் ஏராளமான மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கிறது.
இதில், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் உள்ளன, இவை நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு ஆகியவற்றை அகற்றி, நரம்புகளுக்கு ஊக்கமளிக்கிறது.
உமிழ்நீர் அதிகம் சுரக்கவும், உணவும் நன்கு செரிக்கவும், ஜீரணக் கோளாறுகள் உடனே குணமாகவும் மிளகு பயன்படும்.

தயாரிப்பு முறை :

இது மிகவும் எளிதானது. பாலை லேசாக சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு இனிப்புச் சேர்த்துக் குடிக்கலாம். வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்க்கலாம்.
இது குடிப்பதனால் உடனடியாக சளி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இல்லை. இதைத் தவிர இதைக் குடிப்பதால் நம் உடலுக்கு வேறு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஜலதோஷம் போக்கும் :

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால், இருபது கிராம் மிளகுத்தூளை, பாலில் கொதிக்க வைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம், மூன்று நாட்கள் மட்டும் சாப்பிட்டால் போதும்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலும் பறந்து விடும். சாதாரண ஜலதோசத்திற்கும், காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில், ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து, இரவில் ஒரு வேளை அருந்தினால் நல்ல பலன்கிடைக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும் :

சோம்பல், மந்தம் மற்றும் ஞாபக மறதி உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டித் தேனில், ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டால், சோம்பல் மறைந்துவிடும்.
மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஆண்மைக் குறைபாடு மற்றும் பெண்மைக் குறைபாடு உள்ளவர்கள், தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன், ஆறு மிளகையும் தூளாக்கி, பாலுடன் கலந்து இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் நீங்கி குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

மைக்ரேன் :

மைக்ரேன் தலைவலி இன்றைக்கு பலருக்கும் தொல்லை கொடுக்கும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கிறது. இதற்கு மிளகுப்பால் மிகச்சிறந்த தீர்வைக் கொடுக்கும். நம் மூளையில் ஆக்ஸிஜன் ஃப்ளோ செய்ய இது உதவுகிறது. அத்துடன் இது சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவிடும்

தொண்டை எரிச்சல் :

சிலருக்கு காய்ச்சல் இல்லையென்றாலும் தொண்டை எரிச்சல் அதிகமிருக்கும், எந்த உணவையும் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும்.
இவர்களுக்கு மிளகுப்பால் ஓர் அருமருந்து என்றே சொல்லலாம். மிளகுப்பாலை குடிக்கும் போது ஆரம்பத்தில் தொண்டை எரிச்சல் அதிகமானது போலத் தோன்றும்.ஆனால் படிப்படியாக தொண்டை எரிச்சல் முற்றிலுமாக குறையும்.

நோய்த் தொற்று :

இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து குடித்து வர, பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாம் தப்பிக்கலாம்.அதோடு இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்திடும்.

புற்றுநோய் :

இதில் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான ப்ரோட்டீன் மற்றும் ஃபைட்டோ நியூட்ரியன்ஸ்கள் கிடைக்கின்றன. இது செல்களின் வளர்சிக்கு துணை நிற்கிறது அத்துடன் செல்களின் செயல்பாடுகளுக்கும் பெரிதும் உதவுகிறது.
இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.

எலும்பு :

இப்பால் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. வயதான காலத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்டியோபொராசிஸ் வராமல் தடுக்க இது பெரிதும் உதவுகிறது. ஐந்து வயதிற்கு மேற்பட்ட யாவரும் மிளகுப்பால் தாரளமாக குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் குடித்தால் போதுமானது.

பல்வலி போக்கும் :

பல்சொத்தை, பல்வலி, உடல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்து பல்துலக்கி வந்தால் பிரச்னை தீரும்.

விஷ முறிவுக்கு :

மிளகு எல்லாவித விஷங்களுக்கும், ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வந்ததால், சகல விஷக்கடிகளும் முறியும்.
மிளகுடன் வெற்றிலை சேர்த்து, லேசாக இடித்து, நீரில் கொதிக்கவைத்து, வடித்த நீரை குடித்துவந்தால், மருந்து மற்றும் உணவுப் பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

முடி :

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து, வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் முடி முளைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக