Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 10 அக்டோபர், 2018

பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை


Sri Math Bhagavad Gita




॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத பம்சதஷோ அத்யாய:।

புருஷோத்தம யோகம்


(வாழ்க்கை மரம்)


ஸ்ரீபகவாநுவாச।
ஊர்த்வமூலமத:ஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்।
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்॥ 15.1 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: மேலே வேர் உள்ளதும் கீழே கிளைகள் உள்ளதுமாகிய அரசமரத்தை அழிவற்றதாக கூறுகின்றனர். வேதங்கள் அதன் இலைகள். அந்த மரத்தை யார் அறிகிறானோ அவன் உண்மையை அறிந்தவன். 
அதஷ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஷாகா குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:।
அதஷ்ச மூலாந்யநுஸம்ததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே॥ 15.2 ॥

அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்களாக தளிர்விட்டு கீழும் மேலும் படர்ந்து இருக்கின்றன. அதன் விழுதுகள் மானிட உலகில் செயல்களை விளைவிப்பவனாய் கீழ் நோக்கி பரவியிருக்கின்றன. 

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா।
அஷ்வத்தமேநம் ஸுவிரூடமூலம் அஸங்கஷஸ்த்ரேண த்ருடேந சித்த்வா॥ 15.3 ॥

இங்கே அதன் உருவமோ அதன் முடிவோ ஆரம்பமோ தென்படுவதில்லை. அதற்கு நிலைத்த தன்மையும் இல்லை. நன்றாக வேரூன்றிய இந்த அரச மரத்தை பற்றின்மை என்னும் திடமான வாளால் வெட்டி வீழ்த்தவேண்டும். 

தத: பதம் தத்பரிமார்கிதவ்யம் யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:।
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே।
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ॥ 15.4 ॥

எங்கே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லையோ அந்த இடத்தை தேடவேண்டும். ஆரம்பத்தில் படைப்பு யாரிடமிருந்து தோன்றியதோ, அந்த முதல்வனான இறைவனையே சரணடைய வேண்டும். 
நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:।
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞை: கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத்॥ 15.5 ॥

அகங்காரமும் மனமயக்கமும் நீங்கிய, பற்று என்னும் குற்றத்தை வென்ற, ஆன்ம உணர்வில் நிலை பெற்ற, ஆசைகளை விட்ட, இன்ப துன்பம் போன்ற இருமைகளிலிருந்து விடுபட்ட குழப்பம் இல்லாத மகான்கள் அழிவற்ற அந்த நிலையை அடைகின்றனர். 

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக:।
யத்கத்வா ந நிவர்தம்தே தத்தாம பரமம் மம॥ 15.6 ॥

எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய மேலான இருப்பிடம், அந்த இடத்தை சூரியனும், சந்திரனும், அக்னியும் விளக்குவது இல்லை. 

மமைவாம்ஷோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:।
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி॥ 15.7 ॥

எனது அம்சமே உலகில் உயிர்களாக தோன்றி என்றென்றும் இருக்கிறது. இயற்கையில் நிலைபெற்றதும் மனத்தை ஆறாவதாக உடையதுமான புலன்களை எனது அம்சமே உலக இன்பங்களை நோக்கி இழுத்து செல்கிறது. 

ஷரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஷ்வர:।
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கம்தாநிவாஷயாத்॥ 15.8 ॥

மனங்களுக்கு இருப்பிடமாகிய மலர்களிலிருந்து மனங்களை கிரகித்துகொண்டு காற்று செல்வது போல் ஜீவன் புதிய உடலை எடுக்கும் போதும் பழைய உடலை விடும் போதும் புலன்களையும் மனத்தையும் பற்றிக்கொண்டு போகிறான். 

ஷ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஷநம் ச ரஸநம் க்ராணமேவ ச।
அதிஷ்டாய மநஷ்சாயம் விஷயாநுபஸேவதே॥ 15.9 ॥

காது, கண், உடம்பு, நாக்கு, மூக்கு, மனம் இவற்றை பற்றிக்கொண்டு ஜீவன் விஷயங்களை அனுபவிக்கிறான். 

உத்க்ராமந்தம் ஸ்திதம் வா அபி பும்ஜாநம் வா குணாந்விதம்।
விமூடா நாநுபஷ்யந்தி பஷ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ:॥ 15.10 ॥

உடலை விட்டு செல்லும் போதும், உடலுடன் இருக்கும் போதும், இன்பதுன்பங்களை அனுபவிக்கும் போதும், குணங்களுடன் கூடியவனாக இருக்கும் போதும் எந்த நிலையிலும் ஜீவனை மூடர்கள் காண்பதில்லை. புத்தி விழித்தெழ பெற்றவர்கள் காண்கிறார்கள். 

யதந்தோ யோகிநஷ்சைநம் பஷ்யந்த்யாத்மந்யவஸ்திதம்।
யதந்தோ அப்யக்ருதாத்மாநோ நைநம் பஷ்யம்த்யசேதஸ:॥ 15.11 ॥

முயற்சி செய்கின்ற யோகிகள் இந்த ஜீவனை தங்களுள் இருப்பதாக காண்கிறார்கள். மனத்தூய்மை பெறாதவர்களும் தன்னறிவற்றவர்களும் முயற்சி செய்தாலும் இதனை காண்பதில்லை. 

யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதே அகிலம்।
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்॥ 15.12 ॥

சூரியனில் உள்ள எந்த ஒளி உலகம் முழுவதையும் பிரகாசிக்கசெய்கிறதோ, எந்த ஒளி சந்திரனிலும் அக்னியிலும் திகழ்கிறதோ, அந்த ஒளி என்னுடையது என்று அறிவாய். 

காமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா।
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:॥ 15.13 ॥

நான் என் சக்தியால் பூமியில் புகுந்து உயிர்களை தாங்குகிறேன். உயிர் சக்தி வடிவாகிய சந்திரனாக ஆகி மூலிகைகளை எல்லாம் வளர்கிறேன். 

அஹம் வைஷ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஷ்ரித:।
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம்॥ 15.14 ॥

நான் உயிர்களின் உடம்பில் வைசுவாணர அக்னியாக இருந்துகொண்டு பிராணன் மற்றும் அபானனுடன் கூடி நான்கு விதமான உணவை ஜீரணம் செய்கிறேன். 
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம்ச।
வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்॥ 15.15 ॥

நான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறேன். ஆன்ம நினைவு, விழிப்புணர்வு, சந்தேகமற்ற நிலை எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. அனைத்து வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை தோற்றுவித்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே. 

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச।
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே॥ 15.16 ॥

நிலையற்றது என்றும் நிலையானது என்றும் உலகில் இரண்டு பிரிவுகள் உள்ளன. தோன்றிய அனைத்தும் நிலையற்றவை என்ற பிரிவில் வருகின்றன. தோன்றிய அனைத்தின் உள்ளே இருப்பவன் நிலையானவன். 

உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:।
யோ லோகத்ரயமாவிஷ்ய பிபர்த்யவ்யய ஈஷ்வர:॥ 15.17 ॥

யார் மூன்று உலகங்களை வியாப்பித்து அவற்றை தாங்குகிறாரோ அவர் அழிவற்றவரும் தலைவரும் பரமாத்மா என்றும் சொல்லபடுபவருமான மேலான புருஷர் ஆவார். நிலையற்றவை, நிலையானவன் இருவரிலிருந்தும் வேறானவர் இவர். 

யஸ்மாத்க்ஷரமதீதோ அஹமக்ஷராதபி சோத்தம:।
அதோ அஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:॥ 15.18 ॥

நான் எந்த காரணத்தால் நிலையற்றதை கடந்தவனோ, நிலையானதற்கும் மேலானவனோ அந்த காரணத்தால் உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன். 

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதிபுருஷோத்தமம்।
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத॥ 15.19 ॥

அர்ஜுனா ! யார் இவ்வாறு மனமயக்கம் இல்லாதவனாக புருஷோத்தமன் என்று என்னை அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவனாக என்னை முழுமனத்துடன் வழிபடுகிறான். 
இதி குஹ்யதமம் ஷாஸ்த்ரமிதமுக்தம் மயா அநக।
ஏதத்புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஷ்ச பாரத॥ 15.20 ॥

பாவம் இல்லாதவனே ! அர்ஜுனா ! மிகவும் ஆழ்ந்ததான இந்த சாஸ்திரம் என்னால் கூறப்பட்டது. இதை அறிந்தவன் அறிவாளியாகவும் செய்ய வேண்டியதை செய்தவனாகவும் ஆவான். 

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம்வாதே
புருஷோத்தமயோகோ நாம பம்சதஷோ அத்யாய:॥ 15 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'புருஷோத்தம யோகம்' எனப் பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம் நிறைவுற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக