Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 9 ஜனவரி, 2019

நிலக்கடலை

Image result for nilakadalai

"நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது அவர் சொன்ன 
ஒரு சின்ன உந்துதல் காரணமாகவே இந்த பதிவு அதன் பின் எழுந்த 
யோசனை பின்பு ஒரு முன்னோட்டமாகவே இந்த பதிவு இதில் 
இடப்பட்டுள்ளது இந்த பதிவு பெரும் வரவேற்பை பொறுத்தே 
இந்த பகுதியில் இது தொடர்பான பதிவுகள் இடம் பெறும்

பதிவுகளில் ஏதேனும் தவறோ குளறுபடியோ இருந்தால் தயங்காமல்
சுட்டி காட்டுங்கள்..

விவசாயம் அறிவோம் பகுதியின் முதல் ஆரம்பம்...".


     

நிலக்கடலை சாகுபடி செய்யும் முறை:

நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜூன்  – ஜூலை 
மற்றும் டிசம்பர்ஜனவரி மாதங்களே ஆகும்.
நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும் 
நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.
·  (சுண்ணாம்புச்) சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும்
  அப்போதுதான் தரமான நல்ல விதைகளைப் பெறமுடியும்
.
·“18/64” அளவுள்ள (7.2 மி.மீ. வட்டமுள்ள) வட்டக்கண் சல்லடை கொண்டு 
 சலித்து நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத பொருக்கு விதைகளையே 
 விதைப்புக்காக பயன்படுத்த வேண்டும். உடைந்து போன
 சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய 
 விதைகளை நீக்கிவிட வேண்டும்.
·   முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட
  இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும்.  
  கால அளவைப்பொறுத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும்.
·      
  தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்க வேண்டும்.
  ஓட்டின் உட்புறம் வௌளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் 
  இருப்பின் அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது.

அறுவடைக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும்
நீர் பாய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது.
·      மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன்
    நீர் பாய்ச்சத் தேவையில்லை.அறுவடைக்கு முந்தைய பாசனத்திற்கு 
    நீர் இல்லையெனில் நாட்டுக்கலப்பையைப் பயன்படுத்தி 
    செடிகளைப்பிடுங்கி ஆட்களைக்கொண்டு மண்ணிலுள்ள 
    காய்களைச் சேமிக்க வேண்டும்.
·      
  பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக் கூடாது
  ஏனெனில் ஈரமாக உள்ள போது, குறிப்பாகக் 
  கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்து விடும்
  செடிகளிலிருந்து காய்களைப் பிரிக்க நிலக்கடலை பிரிப்பானை 
  உபயோகப்படுத்தலாம்.
·      
   காய்களை நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை வெயிலில் 
   உலர்த்த வேண்டும்
·     
  இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைப்பது 
  முழுவதுமான காய்தலுக்கு உதவுகிறது.
·      
  வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது 
  நேரடியாகக் காய வைத்தலைத் தவிர்க்க வேண்டும்
·     
  காய்களைக் கோணிப்பைகளில் கட்டி மணற்பரப்பின் 
  மீது சேகரித்து வைக்கலாம்.

·   காய்ந்த காய்களுக்கு ஈரப்பதம் வருவதைத் தவிர்க்க வேண்டும்

இவ்வாறு
மேற்கூறிய வேளாண்மை உத்திகளைக் கையாண்டு 
மானாவாரி நிலக்கடலையில் மகசூல் உற்பத்தியைப் பெருக்கி 
அதிக லாபம் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

2 கருத்துகள்:

  1. Rakı fiyatları üstünden alınan Özel Tüketim Vergisi’ne (ÖTV), yeni yılla birlikte %13.48 zam yapıldı. 3 Ocak 2020 ile birlikte rakı fiyatları da dahil olmak üzere birçok alkol fiyatında yeniden yükselme yaşandı.
    Bizler de, alkol fiyatlarına yapılan bu vergi zammından sonra, değerli ziyaretçilerimiz için güncel rakı fiyatları 2020 sitemizin araştırman editörleri vesilesiyle araştırdık, anlaşılır ve açık bir şekilde listeledik.

    பதிலளிநீக்கு

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!