Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 27 ஜூலை, 2019

வேடனிடம் அரசர் கற்ற பாடம்..


Image result for வேடனிடம் அரசர் கற்ற பாடம்..

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஒரு நாட்டில் பக்திமிக்க அரசர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் பூஜை செய்யாமல் உணவு உண்ண மாட்டார். ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டிற்கு சென்ற அவர், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், காட்டிலேயே தங்க வேண்டி வந்தது. வீரர்களும் அவருடன் தங்கினார்கள்.

மறுநாள் விடிந்ததும், இறைவனை பூஜிக்கத் தயாரானார். ஒரு மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனை சிவலிங்கமாகக் கருதி, மலர்களால் பூஜித்தார். பின்பு தியானத்தில் ஆழ்ந்தார்.

அச்சமயம் அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக் கொண்டு வந்தான். அவசரத்தில் அரசர் இருந்ததையும், அவர் வணங்கிக் கொண்டிருந்த மணல்மேட்டினையும் கவனிக்காமல் மணல்மேட்டினை மிதித்து விட்டு ஓடினான். அவனது எண்ணமெல்லாம், மானைப் பிடிப்பதில் மட்டுமே இருந்தது.

சத்தம் கேட்டு கண்விழித்த அரசர், மணல்மேடு கலைந்து கிடந்ததைக் கண்டு கோபமடைந்தார். லிங்கத்தை மிதித்ததோடு, இங்கே ஒருவன் இருப்பதையே கண்டு கொள்ளாமல் போகிறானே! நான் அரசர் என்பதாவது அவனுக்குத் தெரியுமா என்ன? ஆணவம் பிடித்த அவனைப் பிடியுங்கள், என்று ஆணையிட்டார்.

வீரர்கள் வேடனைப் பிடிக்க அவன் பின்னால் ஓடினர். ஆனால், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு வீரர்கள் திரும்பினார்கள். இதனால் அரசரின் கோபம் மேலும் அதிகரித்தது.

சிறிதுநேரத்திற்குப் பின் வேடன், தான் துரத்திய மானை சுமந்து கொண்டு வருவதைப் பார்த்தனர். உடனே அவனைப் பிடித்து அரசர் முன் நிறுத்தினார்கள். அப்போதுதான் வேடன் அரசரைப் பார்த்தான். வேந்தே! வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்! என்று அரசரைப் பணிந்தான்.

அரசர் அவனை எரித்துவிடுவது போல் பார்த்தார். இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனாகப் பாவித்து வணங்கிய மணல்மேட்டை மிதித்தாய். என்னை கவனிக்காதவன் போல் அவமானப்படுத்தி சென்றாய். இப்போது எங்களிடம் பிடிபட்டதும் பணிவுள்ளவன் போல் நடிக்கிறாயா? என கோபமாகக் கேட்டார். மன்னிக்க வேண்டும் அரசே! வேட்டையின் போது என் கவனம் முழுவதும் மான் மேல் மட்டும்தான் இருந்தது.

ஒருவன் ஒரு தொழிலைச் செய்யும் போது, அதன் மேல் முழுக்கவனம் வைத்தால் தானே வெற்றி பெறுவான். அதனால் தான் நான் எதையும் கவனிக்கவில்லை என்று கூறினான். வேடனின் பதில் நியாயமானதாக அரசருக்குத் தோன்றியது.

அரசர் மனதில் ஏதோ உறுத்தியது. வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது இருந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் கவனம் முழுவதும் இறை மீது இல்லையே. அதனால் தான், வேடன் மணல்மேட்டைக் கடந்த போது அவனைக் கவனிக்க முடிந்தது. இந்த வேடனின் தொழில் பக்தியின் முன்னால், என் இறைபக்தி தோற்று விட்டதே! என்று என்ணினார் அரசர். தனக்கு அறிவுப்பாடம் புகட்டிய வேடனுக்கு, அரசர் வெகுமதியளித்து அனுப்பினார்.

பிறகு மௌனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தார். தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழ முடியாமல் போனது எதனால்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். இடம் எதுவாக இருந்தாலும், இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாததால் தான் இப்படி நிகழ்ந்தது என அரசருக்குப் புரிந்தது.

நீதி

அரசரைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் லட்சியப் பாதையில் இருந்து, சிறு இடைஞ்சல்களுக்கு அஞ்சி விலகி விடுகிறோம். நம் லட்சியத்திற்குத் தடையாக இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனை நீக்கிவிட்டால் போதும், வெற்றி நிச்சயம்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக