Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஜூலை, 2019

பத்மாசனம்

Image result for பத்மாசனம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பத்மா என்றால் 'தாமரை' என்று பொருள். தாமரை பூவின் வடிவில் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் இதற்கு 'பத்மாசனம்' என்று பெயர். பிராணாயாமம் மற்றும் தியானம் போன்றவற்றை பத்மாசன நிலையில் அமர்ந்து செய்தால் மிகச்சிறந்த பலன்களை பெற இயலும்.

செய்முறை:
  • முதலில் தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்டவும்.                                                                                                                                                           
  • பின்னர் வலது காலை மடக்கி பாதத்தை இடது தொடையின் மீது வைக்கவும். அதுபோல இடது காலை மடக்கி பாதத்தை வலது தொடையின் மீது வைக்கவும்.
  • உள்ளங்கால்கள் மேலே நோக்கியவாறு இருக்க வேண்டும்.
  • குதிகால்கள் தொப்புளுக்கு கீழே அடிவயிற்றை தொட்டபடி இருக்க வேண்டும்.
  • பின் கழுத்திலிருந்து தண்டுவடம் வரை நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.
  • கைகள் வஜ்ராசனத்தில் கூறியவாறு முத்திரை வடிவில் இருக்க வேண்டும்.
  • சாதாரணமாக மூச்சு விடவும்.
  • இதே நிலையில் குறைந்தது அரை நிமிடமாவது இருந்துவிட்டு பின் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
  • பின்னர் கால்களை மாற்றி வைத்து ஆசனத்தை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டும்.
  • ஆசனத்தை முதலில் செய்யும் பொழுது கால்களில் வலி ஏற்படும். ஆனால் தினமும் தொடர்ந்து செய்து வர வலி குறைந்து மிக எளிதாக செய்ய இயலும்.
பலன்கள்:
  • தியானம், பிராணாயாமம் செய்ய மிகச் சிறந்த ஆசனம் இது.
  • கால்களுக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
  • அடிவயிற்று பகுதி உறுப்புகள் மிகச் சிறப்பாக வேலை செய்யும்.
  • கால் மூட்டுகளுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
  • அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.
  • உடல், மன அமைதிக்கு மிகச்சிறந்த ஆசனம்.
  • இடுப்பு பலப்படும்.
  • சுறுசுறுப்போடு இருக்கலாம்.
  • இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும்.
குறிப்பு : பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக்கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக்கூடாது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக