>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 21 ஆகஸ்ட், 2019

    விருக்ஷாசனம்

    Image result for விருக்ஷாசனம் 

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    வடமொழியில் விருக்க்ஷம் என்றால் 'மரம்' என்று பொருள். இந்த ஆசனம் பார்ப்பதற்கு மரத்தை போன்று இருப்பதால் இதற்கு விருக்ஷாசனம் என்று பெயர்.

    செய்முறை:
    • முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். (அதாவது மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்க வேண்டும்).
    • பின், வலது காலை மடித்து இடது தொடையின் உள்பக்கமாக வைக்கவேண்டும். அதாவது குதிகால் மேல்நோக்கியும், கால் விரல்கள் தரையை பார்த்தவாறும் இருக்க வேண்டும்.
    • பின்னர், மூச்சை உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருந்து தூக்கி தலைக்கு மேல் உள்ளங்கைகளை சேர்த்து வணக்கம் தெரிவிப்பது போல் வைக்க வேண்டும்.
    • இப்பொழுது மூச்சை வெளிவிடவும்.
    • சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். இதே நிலையில் ஆடாமல், அசையாமல் சுமார் ஐந்து சுவாசங்கள் இருக்கவும்.
    • பின் மூச்சை வெளிவிட்டுக்கொண்டே கைகளையும், காலையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
    • இதே போல் காலை மாற்றி செய்ய வேண்டும்.
    பலன்கள்:
    • கால்களும், தோள்களும் வலிமை பெறுகிறது.
    • மார்பு பகுதி நன்றாக விரிவடைவதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    • ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும். மனதை ஒருநிலைப்படுத்தவும் பயன்படுகிறது.
    • வாத நோய், மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
    • குறிப்பு: ( முதலில் இந்த ஆசனத்தை செய்யும் பொழுது தடுமாற்றம் ஏற்படும். எனவே முதலில் சுவரின் உதவியுடன் செய்து பழகிய பின் தனியாக நின்று பயிற்சி பெறவும். )

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக