இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தமிழகம்- வேலூர் மாவட்டத்தில்
தாய் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால்
சூடுவைத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியூர் பகுதியில் கணவரை பிரிந்து
வாழும் பெண் ஒருவர் உதயகுமார் என்ற இளைஞருடன் காதல் உறவில் இருந்துள்ளார். குறித்த
பெண்ணுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
இவர்களின் பழக்கத்தை அறிந்த பெண்ணின்
தாய் அவரை கண்டித்த நிலையில், தாயை பிரிந்த அவர் தனியாக வீடு எடுத்து வசித்தார்.
மகள் தனியாக சென்ற சில மாதங்களில் தாய்
இறந்துவிட்டதால், தாயிடம் இருந்த தனது 2 வயது மகளை தனது வீட்டிற்கு அழைத்து
சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் வருகை,
வீட்டிற்கு வந்து சென்ற காதலன் உதயகுமாருக்கு இடையூறாக இருந்துள்ளது.
இதனால் காதலர்களுக்குள் சண்டை
வந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை அந்த சிறுமி பார்த்துவிட்டதாக
கூறப்படுகிறது. இதனால் குழந்தை என்று பாராமல் அதனை தீர்த்துக்கட்ட
திட்டமிட்டுள்ளனர்.
பின்னர் சிறுமியின் உடல் முழுவதும்
சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய உதயகுமார், சிறுமி எழுந்து ஓடிவிடக்கூடாது
என்பதற்காக பாதத்திலும் சூடுவைத்துள்ளான்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர்
குழந்தைகள் பாதுகப்பு மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள்
குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தையின் அனைத்து உறுப்புகளிலும்
சூடுவைத்ததோடு காயங்கள் ரணமாகவே இருந்து குழந்தை உயிரிழக்க வேண்டும் என்பதற்காக,
அந்த காயங்களை மரக்குச்சியால் கிளறி வைத்த கொடூரத்தையும் அவன் செய்திருப்பதாக
காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியின் தாயை உடனடியாக
கைது செய்த போலீசார் தலைமறைவாக இருந்த உதயகுமாரையும் கைது செய்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக