Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பிலிப்பைன்சில் உல்லாச விடுதி மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது - 9 பேர் உடல் கருகி பலி


 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 
 
 
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் சம்பொவாங்கோ டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள திபோலாக் நகரில் இருந்து நேற்று முன்தினம் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 நர்சுகள் மற்றும் 2 விமானிகள் உள்பட 9 பேர் இருந்தனர்.

இந்த விமானம் லாகுனா மாகாணத்தில் உள்ள பான்சோல் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது விமானம் அங்குள்ள உல்லாச விடுதி மீது விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்தது.

இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். கரிக்கட்டைகளான நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!