Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 31 அக்டோபர், 2019

5 (ம) 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு..

5 (ம) 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு  வழிமுறைகள் வெளியீடு..


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்குழு அமைத்து தேர்வுப்பணிகளை மேற்கொள்ள உத்தரவு..!
சென்னை: 5, 8 பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ. தூரத்துக்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். 5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, ஆகிய பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். 8 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு பலர் தனகளின் எதிர்ப்பையும், ஆதரவையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தேர்வுகளுக்கு மூன்று ஆண்டுகள் விலக்குப் பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இதை தொடர்ந்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்தும் வழிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் படிக்கும் பள்ளியிலிருந்து முறையே 1 மற்றும் 3 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளுக்காக முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!