Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 1 அக்டோபர், 2019

தீபாவளி பண்டிகை: சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழக அரசு

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார்.

தீபாவளி பண்டிகை: சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழக அரச...
தீபாவளி விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகளின் போக்குவரத்தை சிரமத்தை குறைக்க தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது.

அந்த வகையில் அக்டோபர் 24 முதல் 26-ம் தேதி வரை சென்னையில் இருந்து 4,265 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 12 ஆயிரத்து 575 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபார் 23-ம் தேதி தொடங்கும்.

சென்னையில் குறிப்பாக 5 இடங்களிலிருந்து இயக்கப்படவுள்ள இப்பேருந்துகள் மாதவரம், கே.கே. நகர், பூவிருந்தவல்லி, தாம்பரம் மெப்ஸ் மற்றும் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும்.

அதேபோல அக்டோபர் 7 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன் பதிவு வருகின்ற 3 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து செல்லும் பயணிகளுக்கு காவலர்களின் மேற்பார்வையில் இரண்டு தனிப்பட்ட கண்ட்ரோல் சென்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 7 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாகவும் அதில் 2 லட்சம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!