Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 அக்டோபர், 2019

போலீஸோடு ஒத்தைக்கு ஒத்தை, மார்கெட் வரசொன்ன ஹோட்டல் ரவுடி வீடியோ!

 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னை புதுப்பேட்டைப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் உணவை வழங்கிய ஹோட்டல் உரிமையாளரிடம் கேள்வி கேட்ட காவல்துறை அதிகாரியை, ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த ஹோட்டல் உரிமையாளர் வைரல் வீடியோ..



ஹைலைட்ஸ்‘நான் பிளாஸ்டிக் வச்சிருக்கத நீ கேட்கக் கூடாது..’
‘வந்து பாரு, நைட் 10 மணிக்கு மார்கெட் வந்து பாரு..’
இந்த மிரட்டலை விடுத்த ஹோட்டல் ரவுடி, பையில் பிரதமர் மோடி புகைப்படமிருந்தது..
சென்னை புதுப்பேட்டைப் பகுதியில், ஆயுதப்படை காவலர் சரவணன் என்பவர், அப்பகுதியிலிருந்த ஹோட்டல் ஒன்றுக்கு நேற்று இரவு உணவு வாங்கச் சென்றுள்ளார். அங்கு 2 கல் தோசைகளை ஆர்டர் செய்துவிட்டு உணவுக்காக காத்திருந்தார். அப்போது, அந்த கடையில் பணிபுரிந்தவர்கள், தோசைகளைத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் மடித்தும், மற்றொரு பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்யப்பட்ட தோசையை உள்ளே வைத்தும் சரவணனிடம் கொடுத்துள்ளனர்.

 
இதைப் பார்த்து அதிர்ந்துபோன ஆயுதப்படை காவலர் சரவணன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு உணவுகளை ஏன் வழங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார். காவலரின் கேள்விக்கு அந்த ஹோட்டல் உரிமையாளர் முறையான பதிலேதும் அளிக்கவில்லை. இதனால், காவலர் சரவணன் தனது மொபையில் கேமராவில் அந்த நிகழ்வைப் படமாகப் பதிவு செய்கிறார்.




 

அந்த வீடியோ பதிவில், ஹோட்டல் உரிமையாளர் காவலரை ஒருமையில் பேசுவது பதிவாகி உள்ளது. என்கிறார். அதற்கு “நான் சாதாரணமாக மக்களில் ஒருவனாக, இந்த கேள்வியைக் கேட்கிறேன்” எனக் காவலர் பதிலளிக்கிறார்.


போலீஸை மிரட்டும் ஹோட்டல் உரிமையாளர்!
இதற்கு, ஹோட்டல்காரர், “அப்ப நாளைக்கு நைட் 10 மணிக்கு மார்கெட் வா பதில் சொல்றேன், கண்டிப்பா நீ வர, உன் நம்பர் சொல்லு” எனக் கூறி, சரவணனின் தொடர்பு எண்ணை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை வாட்ஸ் ஆப்பில் ஷேர் செய்த சரவணன், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ஹோட்டல் உரிமையாளர் காவல்துறையினரின் பாத்ரூமை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!