• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Learn Carnatic Music in Online

Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 12 நவம்பர், 2019

ஜப்பானில் குறைந்துவரும் விவசாயப் பணியாளர்கள்... இனி ரோபோக்கள்தான் ஒரே வழி!

ஊர்க்கோடாங்கி செவ்வாய், நவம்பர் 12, 2019
ஜப்பான் 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



எதிர்காலத்தில் இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பல நாடுகளும் புதிய கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன. அதில் ஜப்பான் ஒரு படி மேலே போய்விட்டது.
உலக அளவில் 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 7.7 பில்லியனிலிருந்து 9.8 பில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வர்த்தக ரீதியிலான உணவுகளைத் தயாரிப்பதற்குச் சர்வதேச அளவில் அதிக தேவை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் பல்வேறு இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பல நாடுகளும் புதிய கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன. அவற்றில் ஜப்பான் ஒரு படி மேலே போய்விட்டது. விதைகள் தூவுவது முதல் அறுவடை செய்வது வரை விவசாயப் பணிகளுக்குச் சுமார் 20 வகையான ரோபோக்களை உருவாக்க, அந்த நாட்டு அரசு மானியம் வழங்கிவருகிறது.
சமீபத்தில், ஹொக்கைடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து யான்மர் எனும் இன்ஜீன் தயாரிக்கும் நிறுவனம், ரோபோ டிராக்டரை வடிவமைத்து, வயலில் சோதனை செய்துள்ளது. இதில், சென்சார் உதவியுடன் ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு டிராக்டர்களை இயக்கலாம்.

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நிசான் நிறுவனம், ஜி.பி.எஸ் மற்றும் வைஃபைகொண்ட சூரிய சக்தியால் இயங்கும் ரோபோக்களை உருவாக்கியது. பெட்டி வடிவிலான அந்த ரோபோ, நீர் தேங்கியுள்ள வயலுக்குச் சென்று, தேங்கியுள்ள நீரில் ஆக்சிஜனைக் கூட்டியது. அதனால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் தேவை வெகுவாகக் குறைந்தது. இந்த மாதிரியான தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், பல இளைஞர்கள் விவசாயப் பணியை நோக்கித் திரும்பியிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜப்பான். ஆட்கள் குறைவால் ஏற்படும் பொருளாதார சரிவையும் விவசாயப் பணிகளையும் முறைப்படுத்த இந்த ரோபோக்கள் உதவுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், ஜப்பான் வயல்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாகக் குறைந்திருக்கிறது. மேலும், ஒரு பணியாளரின் சராசரி வயது 67 ஆக இருக்கிறது. மேலும், பல விவசாயிகள் பகுதி நேரமாக மட்டுமே வேலை செய்கிறார்கள். ஜப்பானின் நில அமைப்பும், நாட்டின் உணவுத் தேவையில் வெறும் 40 சதவிகிதம் மட்டுமே பூர்த்திசெய்யும் விதமாக அமைந்துள்ளது. இதனால், விழித்துக்கொண்ட ஜப்பான் அரசு, மானியம் வழங்கி ரோபோக்களை வடிவமைக்கும் இலக்கில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
ஜப்பானின் 85 சதவிகிதம் நிலமானது மலைப் பகுதிகளே. மீதியுள்ள நிலம் அரிசி மட்டுமே பயிர் செய்வதற்கு ஏற்றது. அதனால், அரிசிதான் ஜப்பானின் முக்கிய உணவாக இருந்தது. எனவே, அரிசி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியமும் வழங்கிவந்தது. ஆனால், தற்போது உணவு முறை முற்றிலுமாக மாறத் தொடங்கியுள்ளது. தனிநபர் ஓராண்டுக்கு அரிசி உண்ணும் அளவும் குறைந்திருக்கிறது. எனவே, ஜப்பானில் அரிசியைத் தவிர வேறு பயிர்களை விவசாயம் செய்யும் நிலை.
அத்தகைய பணிகளைச் செய்ய ஆட்கள் கிடைக்காத நிலையில், விவசாயிகள் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம். அரிசி தவிர, இதர பயிர்களுக்கு மருந்துகளைத் தெளிக்க, ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மனிதன் இரண்டு நாள்களில் செய்யும் வேலையை, இந்த ட்ரோன்கள் அரை நாளில் முடித்துவிடுகிறது. எனவே, ஜப்பான் அரசும் தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் அரிசி உற்பத்தியை 2030ஆம் ஆண்டுக்குள் 50 மில்லியனாக அதிகரிக்க ஜப்பான் உதவி செய்து, பலருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயிற்சியைக் கொடுத்துள்ளது. அதன் விளைவாக, ஆப்பிரிக்காவில் ஹெக்டேர் ஒன்றுக்கு 4 டன்னிலிருந்து 7 டன்னாக உற்பத்தி உயர்ந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளின் வருமானமும் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் விவசாய தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்டுசெல்வதில் ஜப்பான் முழுக் கவனம் செலுத்திவருகிறது.
தவிர வியட்நாம், மியான்மர் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடனும் ஜப்பான் இணைந்து செயல்படுகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உணவு தேவையில் 55 சதவிகிதத்தை உற்பத்தி செய்யவேண்டும் என இலக்கும் நிர்ணயித்துப் பயணித்து வருகிறது.
உணவுத் தேவையை அதிகமான இயந்திரத் தொழில்நுட்பங்களால் சாதிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது ஜப்பான்.

உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • 12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • பல்லி விழும் பலன்கள்
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • கண்ணப்ப நாயனார்
    கண்ணப்ப நாயனார்
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து...
  • நாடு முழுவதும் "NO MASK NO SERVICE" திட்டம் விரைவில் அமல் செய்யப்படும்!
      புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. அதன் வரிசையில், "முகமூடி இல்லை - சேவை இல்லை" (No mask - No service)...
  • டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க
    டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை பொருத்தவரை கேள்விகளின் போக்கு ...
  • துலாம் ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
    🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன், புதன் நட்பு என்ற நிலையில் நிற்கின்றார். இந்நிலையில் புதனால் உண்டாகும் சுப மற்றும்...
  • 3-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    'வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் தலைகீழாக மாற்றுபவர் கேதுபகவான். மனதை பாதிக்கும் மாற்ற...
  • துலாம் ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
    🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் கேது நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம...
  • பூப்பறிக்க வருகிறோம்
    பூப்பறிக்க வருகிறோம்
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து ...
  • 12-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனிபகவான். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழ...
  • வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான். அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    ------------------------------------- சிரிப்பதற்கான நேரம்...!! ------------------------------------- பாபு : அந்த புரோக்கர்தாங்க எங்க 5 ப...
  • 7-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
     புதன் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. கல்வியில் சிறந்து விளங்க ஜாதகத்தில் வித்யாக...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி