• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 12 நவம்பர், 2019

ஜப்பானில் குறைந்துவரும் விவசாயப் பணியாளர்கள்... இனி ரோபோக்கள்தான் ஒரே வழி!

ஊர்க்கோடாங்கி செவ்வாய், நவம்பர் 12, 2019
ஜப்பான் 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



எதிர்காலத்தில் இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பல நாடுகளும் புதிய கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன. அதில் ஜப்பான் ஒரு படி மேலே போய்விட்டது.
உலக அளவில் 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 7.7 பில்லியனிலிருந்து 9.8 பில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வர்த்தக ரீதியிலான உணவுகளைத் தயாரிப்பதற்குச் சர்வதேச அளவில் அதிக தேவை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் பல்வேறு இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பல நாடுகளும் புதிய கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன. அவற்றில் ஜப்பான் ஒரு படி மேலே போய்விட்டது. விதைகள் தூவுவது முதல் அறுவடை செய்வது வரை விவசாயப் பணிகளுக்குச் சுமார் 20 வகையான ரோபோக்களை உருவாக்க, அந்த நாட்டு அரசு மானியம் வழங்கிவருகிறது.
சமீபத்தில், ஹொக்கைடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து யான்மர் எனும் இன்ஜீன் தயாரிக்கும் நிறுவனம், ரோபோ டிராக்டரை வடிவமைத்து, வயலில் சோதனை செய்துள்ளது. இதில், சென்சார் உதவியுடன் ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு டிராக்டர்களை இயக்கலாம்.

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நிசான் நிறுவனம், ஜி.பி.எஸ் மற்றும் வைஃபைகொண்ட சூரிய சக்தியால் இயங்கும் ரோபோக்களை உருவாக்கியது. பெட்டி வடிவிலான அந்த ரோபோ, நீர் தேங்கியுள்ள வயலுக்குச் சென்று, தேங்கியுள்ள நீரில் ஆக்சிஜனைக் கூட்டியது. அதனால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் தேவை வெகுவாகக் குறைந்தது. இந்த மாதிரியான தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், பல இளைஞர்கள் விவசாயப் பணியை நோக்கித் திரும்பியிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜப்பான். ஆட்கள் குறைவால் ஏற்படும் பொருளாதார சரிவையும் விவசாயப் பணிகளையும் முறைப்படுத்த இந்த ரோபோக்கள் உதவுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், ஜப்பான் வயல்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாகக் குறைந்திருக்கிறது. மேலும், ஒரு பணியாளரின் சராசரி வயது 67 ஆக இருக்கிறது. மேலும், பல விவசாயிகள் பகுதி நேரமாக மட்டுமே வேலை செய்கிறார்கள். ஜப்பானின் நில அமைப்பும், நாட்டின் உணவுத் தேவையில் வெறும் 40 சதவிகிதம் மட்டுமே பூர்த்திசெய்யும் விதமாக அமைந்துள்ளது. இதனால், விழித்துக்கொண்ட ஜப்பான் அரசு, மானியம் வழங்கி ரோபோக்களை வடிவமைக்கும் இலக்கில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
ஜப்பானின் 85 சதவிகிதம் நிலமானது மலைப் பகுதிகளே. மீதியுள்ள நிலம் அரிசி மட்டுமே பயிர் செய்வதற்கு ஏற்றது. அதனால், அரிசிதான் ஜப்பானின் முக்கிய உணவாக இருந்தது. எனவே, அரிசி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியமும் வழங்கிவந்தது. ஆனால், தற்போது உணவு முறை முற்றிலுமாக மாறத் தொடங்கியுள்ளது. தனிநபர் ஓராண்டுக்கு அரிசி உண்ணும் அளவும் குறைந்திருக்கிறது. எனவே, ஜப்பானில் அரிசியைத் தவிர வேறு பயிர்களை விவசாயம் செய்யும் நிலை.
அத்தகைய பணிகளைச் செய்ய ஆட்கள் கிடைக்காத நிலையில், விவசாயிகள் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம். அரிசி தவிர, இதர பயிர்களுக்கு மருந்துகளைத் தெளிக்க, ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மனிதன் இரண்டு நாள்களில் செய்யும் வேலையை, இந்த ட்ரோன்கள் அரை நாளில் முடித்துவிடுகிறது. எனவே, ஜப்பான் அரசும் தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் அரிசி உற்பத்தியை 2030ஆம் ஆண்டுக்குள் 50 மில்லியனாக அதிகரிக்க ஜப்பான் உதவி செய்து, பலருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயிற்சியைக் கொடுத்துள்ளது. அதன் விளைவாக, ஆப்பிரிக்காவில் ஹெக்டேர் ஒன்றுக்கு 4 டன்னிலிருந்து 7 டன்னாக உற்பத்தி உயர்ந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளின் வருமானமும் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் விவசாய தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்டுசெல்வதில் ஜப்பான் முழுக் கவனம் செலுத்திவருகிறது.
தவிர வியட்நாம், மியான்மர் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடனும் ஜப்பான் இணைந்து செயல்படுகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உணவு தேவையில் 55 சதவிகிதத்தை உற்பத்தி செய்யவேண்டும் என இலக்கும் நிர்ணயித்துப் பயணித்து வருகிறது.
உணவுத் தேவையை அதிகமான இயந்திரத் தொழில்நுட்பங்களால் சாதிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது ஜப்பான்.

உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • 🦎 பல்லி விழும் பலன் – உண்மையில் என்ன நம்பிக்கை?
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • திரௌபதி கேட்கும் நீதி...!
      து ச்சாதனன், திரௌபதியை இழுத்து வந்து சபையில் தள்ளினான். திரௌபதி பாண்டவர்களை பார்த்தாள். பாண்டவர்கள் தலைகுனிந்தனர். துரியோதனன், திரௌபத...
  • நெற்றியில் விபூதி இட்டுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!
    பசுமாட்டு சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும...
  • திருப்பாற்கடல் அத்தி ரெங்கநாத பெருமாள் கோவில் வேலூர்
    திருப்பாற்கடல் அத்தி ரெங்கநாத பெருமாள் கோவில் வேலூர்
    வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் என்ற கிராமத்தில் காஞ்சிபுரம் அத்தி வரதரை போலவே, மிகவும் அபூர்வமான அத்தி மரத்தினால் ஆன அத்தி ரங்க...
  • துலாம் ராசியில் வக்ரமாகும் புதனால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
      ஜோதிட சாஸ்திரத்தில் வியாபாரம், பேச்சு, பகுப்பாய்வு ஆகியவற்றைக் குறிக்கும் புதன் பகவான் துலாம் ராசியின் வக்ர நிலை அடைவது மிகவும் முக்க...
  • எக்காரணம் கொண்டும் இந்த எண்ணில் இருந்து போன் வந்தால் எடுக்க வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை!
    +92 என்ற எண்ணில் தொடங்கும் எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அதை எடுக்காமல் தவிர்க்க வேண்டும் என இந்திய குடிமக்களுக்கு சைபர...
  • பள்ளி பேருந்தை திருடிய பொடியன்! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் காவல் நிலையமே ஃப்ரீஸ் ஆய்டுச்சு!
    ஸ்டியரிங் வீலை முழுசாகூட பிடிக்க முடியாத ஓர் சிறுவன், பள்ளி பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்-படுத்தியுள்ளது. பள...
  • சமூக வலைதளத்தில் ப்ளாக் செய்த பெண்ணை மிரட்டிய காசி !! பரவும் ஆடியோ
    சமூக வலைதளத்தில் ப்ளாக் செய்த பெண்ணை மிரட்டிய காசி !! பரவும் ஆடியோ
    சமூக வலைதளங்களில் தன்னை ப்ளாக் செய்த பெண்களை கசி செல்போன் மூலம் மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. சமூக வலைதள...
  • பாண்டி ஆட்டம்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள...
  • 🏥💳 இந்திய மருத்துவ துறையில் பெரிய மாற்றம் வரப்போகிறதா?
    🏥💳 இந்திய மருத்துவ துறையில் பெரிய மாற்றம் வரப்போகிறதா?
    இருசக்கர வாகனம் முதல் நிதி சேவைகள் வரை பல துறைகளில் வெற்றி கண்டுள்ள Bajaj Group, தற்போது மருத்துவமனை மற்றும் சுகாதார துறையிலும் ...
  • 6-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
     குருபகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!